districts

img

பொதுக்கூட்டத்திற்கு பாஜகவினர் இடையூறு: சிபிஎம் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, மார்ச் 2-  கீழ்வாணியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பொதுக்கூட்டத்தில் இடையூறு செய்த பாஜகவைச் சேர்ந்த நபர் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி ஆப்பக் கூடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. தோழர் எம்என்.காளியண்ணன் நினைவு தின பொதுக்கூட்டம், அந்தி யூர் வட்டம், கீழ்வாணியில் கடந்த  ஜன.18 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது பாஜகவைச் சேர்ந்த சின்னு (எ) சின்னச்சாமி பொதுக்கூட் டத்தில் இடையூறு செய்தார். ஆப் பக்கூடல் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் மீது ஒரு  மாத காலத்திற்கு மேலாக நடவடிக்கை எடுத்த காரணத்தால் மாவட்ட காவல் அலுவலகத்தில் மேல் முறையீடு செய் யப்பட்டது. பெறப்பட்ட புகார் மீது  விரைந்து நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திட்டமிடப்பட்டது. அதனை வலியு றுத்தி ஆப்பக்கூடல் நால்ரோட்டில் விளக்க கூட்டமாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.விஜயராகவன் தலைமை வகித்தார். பவானி தாலு காச் செயலாளர் எஸ்.மாணிக்கம், அந்தியூர் தாலுகாச் செயலாளர் ஆர். முகேசன், மாவட்ட செயற்குழு உறுப் பினர் பி.பி.பழனிச்சாமி ஆகியோர் பேசினர். இறுதியாக மாவட்டச் செய லாளர் ஆர்.ரகுராமன் நிறைவுரை யாற்றினார்.