திருப்பூர் ஜூலை 13 - இடுவாய் ஊராட்சி மன்ற தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினருமான கே.கணேசன் உள் ளிட்ட அவரது குடும்பத்தார் நால்வர் மீது பார திய ஜனதா கட்சியினர் கொடுத்த பொய்யான புகாரின் பேரில் காவல்துறையினர் தவறான வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சி.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: இடுவாய் ஊராட்சி பாரதிபுரம் பகுதியில் சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட நலிவடைந்த பிரிவு மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா பெற்று தருவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை சேர்ந்த இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கே.கணேசன் தொடர் முயற்சி மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக சில ருக்கு பட்டா பெற்றுத் தரப்பட்டது. எனினும் அப்பகுதியைச் சேர்ந்த வேறு சிலரை, பட்டா பெற்ற மக்களுக்கு எதிராக பாஜகவினர் தூண்டி விட்டு ரகளையில் ஈடு பட்டனர். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இந்த சம்பவத்தின் போது அந்த இடத்தில் இல்லாத ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், சம்பவம் அறிந்து சிறிது நேரத்திற்கு பிறகு அங்கு சென் றார். அங்கு வந்த பாஜகவினர் அவருடன் சச்ச ரவில் ஈடுபட்டு தாக்க முற்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு பாஜகவின் இந்த இழிவான நடவடிக்கையை கண்டித்து இருந்தது. அத்துடன் திருப்பூர் சார் ஆட்சியரிடமும் நடைபெற்ற சம்பவத்தில் பாஜகவினர் மீது புகார் மனு அளிக்கப்பட்டுள் ளது. இந்நிலையில் பாஜகவினர் இடுவாய் ஊராட்சி தலைவர் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியி னர் மீது, சாதி ரீதியாக அவதூறு செய்து, தாக் குதல் நடத்தியதாக பொய் புகார் அளித்த னர். சம்பவம் நடைபெற்று ஒரு மாதத்திற்கு மேலான நிலையில் திடீரென வியாழனன்று மங்கலம் காவல் நிலையத்தில் இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் உள் ளிட்ட நால்வர் மீது பாஜகவினர் அளித்த பொய் புகாரின் அடிப்படையில் தவறாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இடுவாய் ஊராட்சியை பொருத்தவரை தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உறுதியாக போராடி அவர்கள் உரிமையை பாதுகாக்க தொடர்ந்து செயல்படும் இயக்கம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். எங்கள் இயக்கத்தின் அப் பழுக்கற்ற ஊழியர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமியை இதற்காக தியாகம் செய்த இயக்கம் மார்க்சிஸ்ட் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பின்னணியில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இடுவாய் ஊராட்சியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கணேசன் தலை வராக வெற்றி பெற்றிருக்கும் நிலையில், உள் ளூரில் உள்ள பாஜகவை சேர்ந்த செல்வகு மார், சம்பத்குமார், சேமலையப்பன் எனும் சிலர் தொடர்ச்சியாக அவதூறு பரப்பி வருவ துடன், ஊராட்சி வளர்ச்சி பணிகளை செய்வ தில் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். ஊராட்சித் தலைவர் குறித்தும் நிர்வாக செயல்பாடு குறித்தும் பொய்யான தகவல் களை தவறான முறையில் தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். இடுவாய் ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கை சீர்குலைக் கும் நோக்கத்தோடு அங்குள்ள நல்லிணக்க சூழ்நிலையை கெடுக்க வேண்டும் என்ற எண் ணத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சுய நலமிகள் செயல்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாகவே தற்போது வன்கொ டுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை இடுவாய் ஊராட்சி மன்ற தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். பாரதிய ஜனதா கட்சியின் இழிவான அரசியல் சூழ்ச்சி களை மக்களுக்கான அரசியலை நடத்துவ தன் மூலமாக வெற்றி கொள்வோம் என்பதை யும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு சி.மூர்த்தி கூறியுள்ளார்.