districts

img

மக்களை வதைக்கும் மோடி அரசுக்கு எதிராக சிபிஎம் பிரச்சாரம்

திருப்பூர், செப். 5 - விலைவாசி உயர்வை கட்டுப்படுத் தாமல், வேலைவாய்ப்பையும் உரு வாக்காமல் மக்களை வதைக்கும் மோடி  அரசுக்கு எதிராக திருப்பூர் வடக்கு மாந கரம் மற்றும் உடுமலையில் மார்க்சிஸ்ட்  கட்சியினர் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட் டனர். திருப்பூர் வடக்கு மாநகரத்துக்கு உட் பட்ட பகுதிகளில் திங்கள், செவ்வாய் இரண்டு நாட்கள் 12 மையங்களில் இந்த  பிரச்சார இயக்கம் நடைபெற்றது. கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன் இந்த இயக் கத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.  வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர். கணேசன், மாவட்டக்குழு உறுப்பினர் கள் ஆர்.மைதிலி,  வை.ஆனந்தன், மாந கரக்குழு உறுப்பினர்கள் பா.சௌந்த ரராசன், எஸ்.ராஜேந்திரன், ஆர்.நந்த கோபால், கே.நாகராஜ், துரை சம்பத், என்.மனோகரன், பொன்.பாலகுமாரன் உள்பட கட்சி அணியினர் திரளாகப் பங் கேற்றனர். உடுமலை, குடிமங்கலம் ஒன்றியக் குழு உறுப்பினர் தங்கவடிவேல்  தலை மையில் ராமசந்திராபுரம் பகுதியில் பிரச் சார இயக்கம் நடைபெற்றது. இந்த பிரச் சாரத்தில் கட்சியின் ஒன்றியச் செயலாளர்  சசிகலா, ஒன்றியக்குழு உறுப்பினர் ஓம் பிரகாஷ் மற்றும் கிளைச் செயலாளர்கள் விஜயகுமார், ராஜேஸ்குமார், தரும லைசாமி, மணியன், ராஜன், தங்கவேல்   உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண் டார்கள். அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மறியல் போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்து சிஐடியு ஆட்டோ சங்க தொழிலாளர்கள் பொது  மக்கள் மற்றும் வியாபாரிகளிடம் நோட் டீஸ் வழங்கி பிரச்சாரம் செய்தனர்.