districts

img

ஹோட்டல்களில் விலைப்பட்டியல் வைப்பதில்லை தாராபுரம் நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

தாராபுரம், அக்.28- தாராபுரம் நகரில் உள்ள ஹோட் டல்களில் விலைப்பட்டியல் வைப்ப தில்லை. இதனால் பேருந்து நிலை யம் பகுதியில் உள்ள ஹோட்டல்க ளில் சாப்பிட்ட பிறகு நுகர்வோருக் கும், கடை உரிமையாளர்களுக்கும் இடையே பில் கொடுப்பதில் தகராறு  ஏற்படுகிறது என்று நகர்மன்ற  கூட்டத்தில் புகார் தெரிவிக்கப் பட்டது. தாராபுரம் நகர்மன்றக் கூட்டம் நக ராட்சி கூட்ட அரங்கில் நடைபெற் றது. தலைவர் கு.பாப்புகண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட் டத்தில், நகராட்சி ஆணையர் எஸ்.எம்.பாரிஜான், நகராட்சி துணைத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண் டனர். இக்கூட்டத்தில் மன்ற பொரு ளாக 89 தீர்மானங்கள் வைக்கப்பட் டது. இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய விபரம் வருமாறு: துரைசந்தி ரசேகரன் (திமுக): எனது வார்டில் சிஎஸ்ஐ காம்பவுண்டில் சாக்கடை வசதி இல்லை. தண்ணீர் தேங்கி நிற் கிறது. நிர்வாகத்திற்கு நோட்டீஸ்  அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும்.தலைவர்பாப்பு கண் ணன், நோட்டீஸ் அனுப்பலாம். நாகராஜ் (அதிமுக): தாராபுரம்  நகராட்சி பகுதியில் ஹோட்டல்களில் விலை பட்டியல் வைப்பதில்லை. இதனால், பேருந்து நிலையம் பகு தியில் சாப்பிட்ட பிறகு பில் கொடுப்ப தில் தகராறு ஏற்படுகிறது. தலைவர்,  இது குறித்து தொழிலாளர் நலன் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்படும். முருகானந்தம் (திமுக): பல லட் சம் மதிப்பில் தாராபுரம் ஹவுசிங் யூனிட்டில் அண்மையில் கட்டப்பட்ட  பூங்காவில் செடி கொடிகள் முளைத்து சீர் கெட்டு உள்ளது. மேலும் எனது வார்டில் தெரு ஒரங்க ளில் மரம் முளைத்துள்ளதால் பள்ளி  பேருந்துகள் செல்வதற்கு சிரமமாக  உள்ளது. தலைவர், நகராட்சி பூங்கா  உடனடியாக சீரமைக்கப்படும் மரங் களை வெட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உமா மகேஸ்வரி (திமுக): குப்பை களை அள்ளுவதற்கு தூய்மைப்பணி யாளர்களுக்கு ஒப்பந்த நிறுவனம் உபகரணங்கள் வழங்குவதில்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். தலைவர்: காண்ட்ராக்ட ரிடம் அறிவுறுத்தப்படும். ஸ்ரீதரன் (திமுக): நான்கு வழிச் சாலை பகுதியில் தனியார் எலக்ட்ரிக் கல் கடையை ஒட்டி திட்டுகள் கட்டி யுள்ளனர். இதனால் மழை பெய்யும் பொழுது தண்ணீர் பெருக்கெடுத்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதி களுக்கு செல்கிறது என்றார். தலை வர்: ஆய்வு செய்த நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என தெரிவித்தார்.மேலும் இக்கூட்டத்தில் 89 தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.