அரசு பள்ளிகளை மேம்படுத்த தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
திருப்பூர், நவ.18- “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்க ளின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் பள்ளி களின் வளர்ச்சிப் பணிகளுக்கு பங்க ளிப்பை வழங்குவது தொடர்பான அனைத்து தனியார் சங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளு டன் ஆலோசனைக் கூட்டம் சனியன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது, திருப்பூர் மாவட்டத்தில் 1,331 அரசு பள் ளிகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி களுக்கு தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொழில்துறையினர், முன்னாள் மாண வர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன், அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதி களை மேம்படுத்தும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட் டத்தில் நீங்கள் செலுத்தக்கூடிய நன் கொடையை பள்ளிகளின் உட்கட்ட மைப்பை மேம்படுத்துவதற்கு பயன்ப டுத்தப்படும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எந்தப் பள்ளிகளுக்கு என்ன வசதிகள் தேவை என்கிற விபரம் “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” திட்டத்தின் www.nammaschool.tn schools.gov.in என்ற இணையதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட் டுள்ளது. நிதியுதவி செய்ய விரும்பும் நிறுவனங்கள் தங்களால் என்ன வித மான வசதிகளை பள்ளிக்கு ஏற்படுத்தி தர முடியும் என்பதை அறிந்து அதற் கேற்ற பங்களிப்பை வழங்கலாம். வழங் குபவர்கள் நிதியாகவும், பொருளா கவும் மற்றும் சேவையாகவும் வழங்க லாம். மேலும், இத்திட்டம் தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் அண்ணாதுரை (உதவி திட்ட அலுவ லர்) 94438-56934, தனலட்சுமி (முதன் மைக்கல்வி அலுவலர் (நேர்முக உதவி யாளர்) 88387-99374, கெரோலீன் (மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்) 90804-41057 ஆகியோரது தொலை பேசி எண்ணிகளில் தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம் எனத் தெரிவித் துள்ளார். இக்கூட்டத்தில், மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் கீதா, பொது மேலாளர் (மாவட்ட தொழில்மையம்) இராமலிங்கம், இணை இயக்குநர் (மருத்துவநலப்பணிகள்) கனகராணி, இணை இயக்குநர்கள் (தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்) வி.புக ழேந்தி, வி.எஸ்.சரவணன், திருப்பூர் ஏற் றுமதியாளர்கள் சங்கம், சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கம், அச்சுக் கூடம் உரிமையாளர்கள் சங்கம், கல்கு வாரி உரிமையாளர்கள் சங்கம், அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம், ரோட்டரி சங்கம், திருப்பூர் பின்ன லாடை உற்பத்தியாளர் சங்கம், உணவு எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம், திருப்பூர் தொழில் பாதுகாப்பு சங்கம் மற்றும் அனைத்து உற்பத்தியாளர்கள் சங்கம், தொழில் நிறுவனங்களின் பிரதி நிதிகள் மற்றும் துறை சார்ந்த அலு வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
635 கிலோ ரேசன் அரிசி கடத்தல்: ஒருவர் கைது
திருப்பூர், நவ.18- திருப்பூர் அருகே 635 கிலோ ரேசன் அரி சியை கடத்தி சென்ற நபரை காவல் துறை யினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், நல்லிக்கவுண்டன் பாளையம் பிரிவில், ரேசன் அரிசியை காரில் கடத்தி செல்வதாக குடிமைப்பொருள் வழங் கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காவல் ஆய்வாளர் மேனகா, உதவி ஆய்வா ளர்கள் கார்த்தி, கிருஷ்ணன் உள்ளிட்ட போலீ சார் நல்லிக்கவுண்டன்பாளையம் பிரிவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப் போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 635 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதைத்தொ டர்ந்து காரில் இருந்தவரிடம் போலீசார் விசா ரணை மேற்கொண்டதில், அவர் திருப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணன் (52) என்பதும், அவர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்களி டம் குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி, கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ் ணனை கைது செய்தனர். மேலும், அவரிட மிருந்து 635 கிலோ ரேசன் அரிசி மற்றும் கடத் தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
உடுமலை வழியாக ராமேஸ்வரம் ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தல்
உடுமலை, நவ.18- உடுமலை வழியாக கோவை – ராமேஸ் வரம் ரயிலை இயக்க வேண்டும் என பய ணிகள் வலியுறுத்தியுள்ளனர். திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில் பாதை மின்மயமாக்கப்பட்ட பிறகு, கூடுதல் ரயில் சேவை கிடைக்கும் என்ற எதிர்பார்ப் பில் அனைத்து பகுதி மக்களும் இருந்தனர். ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக நீண்ட கால மாக பயணிகள் வலியுறுத்தியும், ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளன. குறிப்பாக, ராமேஸ் வரத்துக்கு செல்லும் ரயில் சேவையை மீண் டும் செயல்படுத்த உடுமலை சுற்றுப்பகுதி பயணிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வரு கின்றனர். இதுகுறித்து ரயில் பயணிகள் தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு அனுப்பி யுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, கோவை - பொள்ளாச்சி - திண்டுக்கல் மீட்டர் கேஜ் வழித்தடத்தில் ஆங்கிலேயர் காலத்திலேயே கோவை - ராமேஸ்வரம் ரயில் இயக்கப்பட்டு, அதிகப்படியான மக்கள் அச்சேவையை பயன் படுத்தி வந்தனர். இந்த ரயிலை தினசரி விரைவு ரயிலாக கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, மதுரை வழியாக உடனடியாக இயக்க வேண்டும். சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தெற்கு ரயில்வேக்கு, ராமேஸ்வரம் தினசரி விரைவு ரயிலை இயக்குவது குறித்து சில ஆண்டுக ளுக்கு முன் கருத்துரு அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆன்மிக பக்தர்கள் மற்றும் வணிகர்களுக்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் பகுதியிலிருந்தும், கோவை - ராமேஸ்வரம் ரயிலை இயக்க அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகள் சார்பிலும், தெற்கு ரயில் வேக்கு பலமுறை மனு அனுப்பப்பட்டுள் ளது. எனவே, விரைவில், ராமேஸ்வரம் ரயிலை இயக்கி பல ஆயிரக்கணக்கான பய ணிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண் டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பூமிதான வாரிய நிலங்கள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருப்பூர், நவ.18- திருப்பூர் மாவட்டம், காங் கேயம் வட்டம், முத்தூர் பிரிவு, வீரணம்பாளையம் மற்றும் தாராபுரம் வட்டம், நஞ்சியம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பூமிதான வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெள்ளியன்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண் டார். காங்கேயம் வட்டம், முத் தூர் பிரிவில் 2.70 ஏக்கர் பரப் பளவு உள்ள பூமிதான வாரிய நிலம், வீரணம்பாளையத் தில் 4.59 ஏக்கர் பரப்பளவு உள்ள பூமிதான வாரிய நிலங்களையும், தாராபுரம் வட்டம், நஞ்சியம்பாளையம் சுண்ணாம்புக்கல் சாலை பகு தியில் 4.45 ஏக்கர் பரப்பளவு உள்ள பூமிதான வாரிய நிலத்தையும் மாவட்ட ஆட்சி யர் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, தாராபுரம் வருவாய் கோட் டாட்சியர் செந்தில் அரசன், வட்டாட்சியர்கள் மயில்சாமி (காங்கேயம்), கோவிந்த சாமி (தாராபுரம்) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
சாலை விதிமீறல்: இளைஞர் கைது
திருப்பூர், நவ.18- திருப்பூர் மாவட்டம், ஊத் துக்குளி அருகே செங்கப் பள்ளி, கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், இளைஞர் ஒருவர் அதிவேக மாக செல்லக் கூடிய இருசக் கர வாகனத்தை ஆபத்தை உருவாக்கும் விதமாக ஓட் டிச் சென்று சாகசத்தில் ஈடு பட்டார். இது குறித்து அப்ப குதி மக்கள் இணையதளம் வாயிலாக சென்னை சட்டம்-ஒழுங்கு காவல் துறைக்கு புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின்பேரில், ஊத் துக்குளி போலீஸார் விசா ரணை மேற்கொண்டனர். விசாரணையில், இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்த இளைஞர் திருமு ருகன்பூண்டியைச் சேர்ந்த துரைராஜ் என்பது தெரியவந் தது. இதையடுத்து ஊத்துக் குளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து துரைராஜைக் கைது செய்து, இருச்சக்கர வாகனத்தை பறிமுதல் செய் தனர்.
முறைகேடாக மது விற்பனை: 1069 மது பாட்டிகள் அழிப்பு
திருப்பூர், நவ.18- சட்ட விரோத மது விற்ப னையில் பறிமுதல் செய்யப் பட்ட 1069 மது பாட்டில்களை திருப்பூரில் மதுவிலக்கு காவல்துறையினர் தரையில் ஊற்றி அழித்தனர். கடந்த சில வாரங்களாக திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் முறைகேடாக மது விற்பனை மற்றும் அரசு நிர்ணயத்த நேரத்தை மீறி மது விற்பனை செய்யப்பட் டதாக 203 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 1069 மதுபாட்டில் களை திருப்பூர் மாநகரம் மதுவிலக்கு காவல்துறை யினர் பறிமுதல் செய்துள் ளனர். இந்நிலையில், கலால் பிரிவு வட்டாட்சியர் ராகவி முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில் கள் சனியன்று திருப்பூர் கும ரன் சாலையில் உள்ள ஊர் காவல் படை அலுவலகம் பின்புறம் மதுவிலக்கு உதவி ஆய்வாளர் கென்னடி தலை மையிலான காவல்துறை யினர் தரையில் ஊற்றி அழித் தனர். இதன் மொத்த மதிப்பு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.
கல்விக்கடன் வழங்கும் முகாம்
தருமபுரி, நவ.18- தருமபுரி மாவட்டத்தில், கல்விக்கடன் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சனியன்று நடைபெற்றது. முகாமில் தருமபுரி ஆட்சியர் சாந்தி கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் உதவிகளை வழங்கினர். இதில், தருமபுரி மாவட் டத்தில் கடந்த ஆண்டு வரை 11,625 நபர்களுக்கு ரூ.261.90 கோடி மதிப்பீட்டில் கல்விக்கடன் வழங்கப்பட் டுள்ளது. இன்றைய (சனிக் கிழமை) தினம் நடைபெற்ற மாபெரும் கல்விக்கடன் வழங் கும் முகாமில் 93 மாணவ, மாணவியர்களுக்கு ரூ. 10.83 கோடி கல்விக்கடன் வழங் கப்பட்டுள்ளது. பல்வேறு வங்கிகள் மூலம் 2023 - 2024 ஆண்டில் இதுநாள் வரை மொத்தம் 370 மாணவ மாணவியர்க ளுக்கு ரூ. 23.13 கோடி கல்விக் கடனாக வழங்கப்பட்டுள் ளது. இக்கல்வி ஆண்டில் 5,000 மாணவ. மாணவியர்க ளுக்கு கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது, என்றார்.
தென்மாநிலங்களின் எதிர்ப்பால் பின்வாங்கிய ஒன்றிய மோடி அரசு
புதுதில்லி, நவ. 18 - 10 லட்சம் மக்கள் தொகைக்கு 100 எம்.பி.பி.எஸ் இடங்கள் என்ற திட்டத்தை, ஓராண்டுக்கு தள்ளி வைத்துள்ளதாக ஒன்றிய பாஜக அரசு திடீரென பின்வாங்கியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் இளங்கலை மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) இடங்களின் எண்ணிக்கை, அந்த மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப இருக்க வேண்டும். அதாவது 10 லட்சம் மக்கள் தொகைக்கு100 எம்பிபிஎஸ் இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் கடந்த ஆகஸ்டில் அறிவித்தது. இந்த திட்டத்தால் தென்னிந்திய மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. தமிழகத்தில் தற்போது 11 ஆயிரத்து 225 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. தேசிய மருத்துவ ஆணையத்தின் வரையறையின்படி தமிழகத்தில் 7 ஆயிரத்து 686 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மட்டுமே அனு மதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலை உருவானது. அதாவது, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதற்கு ஒன்றிய அரசு தடையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மட்டுமன்றி புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிலும், எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை கணிச மாக குறையும் நிலை உருவானது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதன்காரணமாக “10 லட்சம் மக்கள் தொகைக்கு 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் என்ற முடிவை மறுபரி சீலனை செய்யுமாறு ஒன்றிய சுகாதா ரத்துறை கேட்டுக் கொண்டது. எனவே, புதிய வரையறை வரும் 2025-26-ஆம் ஆண்டில் இருந்து அமலுக்கு வரும்” என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.