districts

img

மோடி அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி மௌனப் போராட்டம்

ஈரோடு, பிப். 11- மோடி அரசைக் கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியி னர் மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலக மான ஜவஹர் இல்லத்தில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கி ரஸ் கமிட்டி பொறுப்பாளர் டி..திருச்செல்வம் தலைமையில் மௌனப் போராட்டம் நடைபெற்றது. மத்தியில் ஆளும் பாசிச  பாஜக மோடி அரசு இந்து பெருமக்கள் அன்றாடம் பூஜைக்கு  பயன்படுத்தும் பொருட்களான சூடம், அகர்பத்தி, சாம்பி ராணி ஆகிய பொருட்களுக்கு அநியாய ஜிஎஸ்டி வரியை விதித்துள்ளது. பூண்டு விலையை கட்டுப்படுத்தாததால் இன்று ஈரோட்டில் கிலோ 600 ரூபாய் விற்கிறது. இதனால் ஏழை  எளியவர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட் டுள்ளனர். எனவே உடனடியாக விலையை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற மௌனப் போராட்டத் தில் காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.