தருமபுரி, ஆக.24- ஓய்வுபெறும் மாதத்தில் ஒழுங்கு நடவ டிக்கை எடுக்க கூடாது என தருமபுரியில் நடைபெற்ற தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் 23ஆம் ஆண்டு பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்த பேரவைக் கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி தலைமை ஏற் றார். மாவட்டச் செயலாளர் ஜி.பி.விஜியன், பொருளாளர் எம்.சின்னசாமி ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாநில துணைத் தலைவர் கே.குப்புசாமி வாழ்த்துரையாற்றி னார். தேர்தல் வாக்குறுதியின் படி 70 வயது ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர் பணி காலத்தை ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக்கொண்டு ஓய்வூதியத்தில் திருத்தம் செய்ய வேண்டும். ஓய்வுபெறும் மாதத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வேலூர் தலைமை பொறியாளர் நடவடிக் கையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இதில், மாவட்டத் தலைவராக ஆர்.சுந்தர மூர்த்தி, மாவட்டச் செயலாளராக ஜி.பி.விஜியன், பொருளாளராக எம்.சின்னசாமி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலச் செயலாளர் எஸ்.கணேசன் நிறைவு ரையாற்றினார்.