கோவை, டிச.23- தோழர் சுசீலா கோபாலன் நினைவு தினத்தை முன்னிட்டு, மாதர் சங்கத் தினர் கொடியேற்றி அனுசரித்தனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு ஜனவரி மாதம் 6, 7, 8, 9 ஆகிய தேதி களில் கேரளா மாநிலம், திருவனந்த புரத்தில் நடைபெற உள்ளது. இந் நிலையில், மாநாட்டு பிரச்சாரமாக வும், தோழர் சுசீலா கோபாலன் நினைவுதினத்தை முன்னிட்டு மாதர் சங்க கோவை மாவட்ட, இடைக் குழுக்கள் சார்பில் 8 இடங்களில் 13 மாதர்சங்க கொடிகள் ஏற்றப்பட்டது. மேலும்,மாநாட்டில் ஏற்கவுள்ள தியாகிகள் ஜோதியின் பயணம் ஜன. 30 ஆம் தேதியன்று துடியலூர் பேருந்து நிலையத்திலிருந்து துவங்க வுள்ளது.48 ஆண்டுகளாய் பெண் களின் உரிமைகளுக்காக, பல்வேறு வகையில்பெண்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகள், பெண் அடி மைத்தனம் ஆகியவற்றை எதிர்த்து போராடி உயிர்நீத்த பெண் போரா ளிகளின் நினைவாக இந்த ஜோதி பயணம் செல்ல உள்ளது. முன்னதாக, மாதர் சங்க கோவை மாவட்டக்குழு அலுவலகம் முன்பு நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சி யில், மாவட்ட தலைவர் ஜோதிமணி, மாவட்ட செயலாளர் சுதா, மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ராஜலட்சுமி மற் றும் நிர்வாகிகள் சாந்தா, வனஜா, ரேவதி, தங்கமணி, ஜீவாமணி, கயல் விழி உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.