உடுமலை, ஜன.1- உடுமலை சிறுபான்மை மக்கள் நலக்குழு ஒருங்கி ணைப்பாளர் தோழர் லால் நினைவேந்தல் நிகழ்ச்சி டிச.31ஆம் தேதி தேஜஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. உடுமலை சிறுபான்மை மக்கள் நலக்குழு ஒருங்கிணைப் பாளராக தோழர் லால் செயல்பட்டார். அனைத்து சமய மக்க ளையும் இணைத்து குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்நின்று நடத்தியவர். உடுமலை புத்தக திருவிழா வரவேற்புக்குழுவின் துணை செயலாளராக திறன் பட செயல்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை நகரக் குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர் சங்கத்தின் துணை செயலாளராகவும் சிறப்பாக செயல் ஆற்றிய லால் கடந்த மாதம் உடல் நலக்குறைவால் காலமானார். தோழர் லால் நினைவேந்தல் நிகழ்வுக்கு, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சுப்பரமணியம் தலைமை வகித் தார். முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் தோழன் ராஜா, துரையரசன், பன்னீர்செல்வம், இளையபாரதி, கடத்தூர் ஜெயராமன், தெய்வானை, சிவக்குமார் மற்றும் தேஜஸ் ரோட்டரி சங்கத்தின் சத்தியம் பாபு மற்றும் லால் குடும்பத்தினர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண் டனர்.