அவிநாசி, டிச.26- அவிநாசியில் பல்வேறு இடங்களில் அரசு ஊழியர் சங்கத் தினர் நிவாரண பொருள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சில தினங்களுக்கு முன்பு கடுமையாக மழை பெய்துள்ளது. இதனால் திருநெல் வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பொதுமக்கள் வெகு வாக பாதித்துள்ளனர். எனவே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் வட்ட கிளைகளில் நிவா ரண பொருட்கள் சேகரிக்கும்படி அறிவித்துள்ளனர். இதன்படி அவிநாசி வட்டக்கிளை சார்பில் வட்டக்கிளை தலைவர் சின் ராஜ், வட்டக்கிளை செயலாளர் கருப்பன், மாவட்ட இணைச் செயலாளர் ராமன் உள்ளிட்டோர், வீடு வீடாகவும், தனிநபர்க ளிடமும், அரிசி, பருப்பு உட்பட பல்வேறு பொருட்களை சேக ரித்து வருகின்றனர். சேகரிக்கப்பட்ட பொருட்களை மாவட்ட அளவில் ஒருங்கினைத்து 27 ஆம் தேதி, திருநெல்வேலி மற் றும் தூத்துக்குடி மாவட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்க உள் ளனர்.