districts

img

கோ.முனிராஜ் பணி ஓய்வு பாராட்டு விழா

தருமபுரி, ஜூன் 1- நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற கோ.முனிராஜ்-க்கு பணி ஓய்வு பாராட்டு விழா தருமபுரி யில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தணிக் கையாளராகவும், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகியாக செயல்பட்டவர் கோ.முனிராஜ். இவர் நெடுஞ்சாலைத்துறையில் கண் காணிப்பாளராக பணியாற்றி ஓய்வுபெற்றார். இவரது  பணி நிறைவு பாராட்டு விழா தருமபுரி ரங்கா டிபார்ட் மெண்ட் ஸ்டோர் ஹாலில் நடைபெற்றது. நெடுஞ் சாலைத்துறை கோட்ட கணக்கர் எம்.கிருஷ்ணன் வர வேற்றார். கோட்டப் பொறியாளர் பி.நாகராஜ் சிறப்புரை யாற்றினார். நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் எம்.பி.ஜெயசந்திரன், குணசேகரன்,  ஜெய்சங்கர், க.சண்முகம், எஸ்.கார்த்திகேயன், ஜே.விஜய் ஆகி யோர் வாழ்த்திப்பேசினர். இதில் தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாநிலச் செயலாளர் அண்ணாகுபேரன், மாவட் டத் தலைவர் எம்.சுருளிநாதன், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், மாவட்ட நிர்வாகிகள் சண்முகம், பி.எஸ்.இளவேனில், முனிராஜ், சி.காவேரி, முருகன்,  அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் எம்.பி. பெருமாள், கேசவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கோ.முனிராஜ் ஏற்புரையாற்றினார். உதவியா ளர் இளங்குமரன் நன்றி கூறினார்.

;