districts

img

உலக மகளிர் தின நிகழ்ச்சிகள் கரூரில் விழிப்புணர்வு: மினி மாரத்தான் போட்டி

கரூர், மார்ச் 9 - உலக மகளிர் தினத்தையொட்டி, கரூர் மாவட்ட காவல்துறை சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  திருவள்ளுவர் மைதானத்தில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா தலைமை வகித்து 05 கிலோ மீட்டருக்கான மினி மாராத்தான் போட்டி மற்றும் 03 கிலோ மீட்டருக்கான வாக்கத்தான் போட்டிகளை துவக்கி வைத்தார். இப்போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண் காவலர்கள் மற்றும் பெண் ஊர்காவல் படையினர் உட்பட 500 பெண்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கி, விழிப்புணர்வு குறித்து பேசினார்.