districts

img

நகர் மன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு

மேட்டுப்பாளையம், ஜன. 27- கோவை மாவட்டம், காரமடை நகராட்சி 1 ஆவது  வார்டு சிபிஎம் நகர் மன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு  விழா நிகழ்ச்சி குடியரசு தினத்தன்று நடைபெற்றது.  காரமடை சேரன் நகரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி யில், சிபிஎம் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநா பன் பங்கேற்று, தேசியக் கொடியை ஏற்றி வைத்து  அலுவலகத்தை திறந்து வைத்தார். நகர மன்ற உறுப்பி னர் அலுவலகத்தில் உள்ள அறிவியல் நூலகத்தை  அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு மையத்தின் ஒருங் கிணைப்பாளர் வி.சுரேஷ் திறந்து வைத்தார். இந்நிகழ் வில், தாலுகா கமிட்டி செயலாளர் கே.கனகராஜ், கார மடை நகர மன்ற உறுப்பினர் ரா.பிரியா, மாதர் சங்க மாநில குழு உறுப்பினர் ராஜலட்சுமி, முன்னாள் தாலு காச் செயலாளர் சி.பெருமாள் உள்ளிட்ட திரளானோர்  பங்கேற்றனர்.