districts

img

பென்சன் திட்டத்தை முறைப்படுத்து சிஐடியு அரசு போக்குவரத்து தொழிற்சங்கம் பிரச்சாரம்

கோவை, செப்.29- 15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையில் பென்சன் திட்டத்தை முறைப்படுத்த வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, சிஐடியு தமிழ்நாடு அரசு  போக்குவரத்து ஊழியர் சம் மேளனம் சார்பில் கோவையில் வாகன பிரச்சாரம் நடைபெற்றது. 15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே துவங்கிட  வேண்டும். வரவுக்கும் செலவுக் குமான வித்தியாச தொகையை அரசு வழங்க வேண்டும், 2003க்கு  பிறகு பணியில் சேர்ந்த தொழிலா ளிக்கும் பழைய பென்சன் வழங்க வேண்டும். 94 மாத கால மாக வழங்க வேண்டிய பென்சன்,  டிஏ உயர்வை வழங்க வேண்டும்.  அரசு போக்குவரத்து கழகத்தில்  உள்ள ஓட்டுநர், நடத்துநர், பணி மனை ஊழியர், தொழிற்நுட்ப பிரிவு  உள்ளிட்ட அனைத்து பிரிவிலும் தேவைக்கேற்ப ஊழியர்களை நியமித்திட வேண்டும். தரமான பேருந்து உதிரிபாகங்களை வாங்கி  கொடுத்து பேருந்து இயக்கத் தினை மேம்படுத்த வேண்டும்.  ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளி லேயே பணப்பலன்களை வழங்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி வாகன பிரச் சார இயக்கம் நடைபெற்றது.  

சங்கத்தின் சம்மேளன துணை  பொதுச்செயலாளர் எம்.கனக ராஜ் இப்பிரச்சார இயக்கத்திற்கு தலைமை ஏற்றார். கோவை, உதகை, குன்னூர், கோத்தகிரி, மேட்டுப்பாளையம், கவுண்டம் பாளையம், உக்கடம், சுங்கம், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் மற்றும் பொள்ளாச்சி  ஆகிய அரசு  போக்குவரத்து பணிமனை களிலும், பேருந்து நிலையம் உள் ளிட்ட பகுதிகளில் இந்த வாகன  பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சிஐடியு அரசு போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் தலை வர் வேளாங்கண்ணிராஜ், பொதுச் செயலாளர் பரமசிவம், பொரு ளாளர் கோபால் உள்ளிட்ட தலை வர்கள் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து உரையாற்றினர். முன்ன தாக, மதுரை கலைவாணர் கலைக் குழுவினர் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மக்களின் கவனத்தை ஈர்த்தது. சேலம் இதேபோன்று அரசு விரைவு போக்குவரத்து கழக அஸ்தம்பட்டி பணிமனை முன்பு லியாகத் அலி தலைமையிலும், மெய்யனூர் பணிமனை முன்பு மாணிக்கம் தலைமையிலும், சேலம் தலைமை யகம் முன்பு செம்பான் தலைமை யிலும் வாயிற்கூட்டம் நடை பெற்றது. இதில் சாலை போக்கு வரத்து சம்மேளன மாநில துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன், மாநில துணை பொதுச்செயலாளர் என்.முருகேசன், போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல பொரு ளாளர் சேகர், சம்மேளன குழு உறுப்பினர் இளவழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்ன தாக, சேலம் விபிசி  கலைக்குழு வின் திறவுகோல் என்ற நாடகம் நடைபெற்றது.