திருப்பூர், ஆக.6 – கட்டுமானத் தொழிலாளர் நலவா ரிய பணப்பலன்களை தமிழக அரசு விரைந்து வழங்க வேண்டும் என்று சிஐ டியு காங்கேயம் தாலுகா கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநாடு வலியு றுத்தி உள்ளது. சிஐடியு கட்டிட கட்டுமான தொழி லாளர் சங்கத்தின் காங்கேயம் தாலுகா 18ஆவது மாநாடு செவ்வாயன்று காங் கேயம் சென்னிமலை சாலையில் உள்ள ஸ்ரீஹால் மண்டபத்தில் நடை பெற்றது. காங்கேயம் தாலுகா தலைவர் என்.வீராசாமி தலைமையில் நடை பெற்ற இம்மாநாட்டில், பெண்கள் கிளை நிர்வாகி சரஸ்வதி சங்க கொடியை ஏற்றினார். காங்கேயம் தாலுகாக்குழு உறுப்பி னர் கதிர்வேல் வரவேற்றார். தாலுகா செயலாளர் எம்.கணேசன் வேலை அறிக்கையை முன்வைத்தார். தாலுகா பொருளாளர் ஆர்.பாரதி வரவு செலவு அறிக்கையை முன்வைத்தார். மாநில துணைத்தலைவர் சி.ஆர். ராஜா முகமது துவக்கி வைத்துப் பேசினார். சிஐடியு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, நிர்வாகி நத்தக்காடையூர் செல்வராஜ், வாலிபர் சங்க நிர்வாகி எஸ்.தங்கவேல், கட்டுமான சங்க மாவட்ட உதவித்தலை வர் பத்மநாபன், சிஐடியு கைத்தறி நெச வாளர் சங்க நிர்வாகி கே.திருவேங்கட சாமி, சிஐடியு போக்குவரத்து தொழிலா ளர் சங்க நிர்வாகி வின்சென்ட், சிஐடியு அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.சித்ரா சிஐடியு மின் ஊழியர் சங்க கோட்டச் செயலாளர் டி. கார்த்தி ஆகியோர் வாழ்த்திப்பேசினர். இம்மாநாட்டில் தமிழ்நாடு கட்டு மானத் தொழிலாளர் நலவாரிய பரிந்து ரைகளை நிறைவேற்ற வேண்டும். கட்டு மானத் தொழிலாளர்களுக்கு நல வாரிய பணப்பலன்களை விரைந்து வழங்க வேண்டும், நலவாரிய செயல் பாட்டினை முறைப்படுத்த வேண்டும். கட்டுமானப் பொருட்களின் விலை உயர் வைக் கட்டுப்படுத்த வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு: சிஐடியு கட்டிட கட்டுமான தொழிலா ளர் சங்க காங்கேயம் தாலுகா தலைவ ராக எம்.கணேசன், செயலாளராக ஆர். பாரதி, பொருளாளராக வீராச்சாமி உட் பட 15 பேர் கொண்ட தாலுகா குழு தேர்வு செய்யப்பட்டது. சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் டி.குமார் நிறைவுரை ஆற்றினார். இம்மாநாட்டில் பெண்கள் உட்பட பெருந்திரளான கட் டுமானத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கே.ஆர்.கண் ணையன் நன்றி கூறினார்.