districts

கோவையில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

கோவை, மார்ச் 9- தேர்தல் சமயங்களில் சட்ட விரோத மாக அதிக அளவிலான பணம் எந்த  வகையில் பரிமாற்றம் செய்யப்பட்டா லும், அவை உடனடியாக தடுத்து நிறுத் தப்படும் என தமிழ்நாடு தலைமை தேர் தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரி வித்துள்ளார். கோவை, பொள்ளாச்சி நாடாளு மன்ற தொகுதிகளில் நாடாளுமன்ற தேர் தலுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட் டம், தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தலைமை யில் நடைபெற்றது. இதனைத்தொ டர்ந்து தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களை சந்தித்தார். அப் போது அவர் பேசுகையில்,  கோவை மற்றும் பொள்ளாச்சி நாடா ளுமன்ற தேர்தல் பணிகள் எப்படி உள் ளது என்பது குறித்து நாங்கள் ஆலோ சனை மேற்கொண்டோம். குறிப்பாக  கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர் விவரங்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் நிலை  உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. அதேபோல சட்ட விரோதமாக வாக்காளர்களுக்கு பணம்  பரிமாற்றம் செய்வதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து வித முன்னேற் பாடு பணிகளையும் மேற்கொண்டுள் ளோம். குறிப்பாக சிவில் அப்ளிகேஷன் மூலம் எந்த ஒரு தனி நபரும் உரிய  ஆதாரத்துடன் குறிப்பாக வீடியோ அல் லது புகைப்படத்துடன் புகாரை பதிவு  செய்யும் போது, 100 நிமிடங்களுக்குள்  அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல காவல்துறை, வரு வாய்த்துறை, வணிகவரித்துறை, வரு மான வரித்துறை வங்கிகள் உள்பட பல்வேறு துறையினருக்கும் அடங் கிய குழுவை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களுக்கு இஎஸ்எம்எஸ் அப்ளிகே ஷன் மூலம் அங்கு புகார் அளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து உள்ளோம். கடந்த காலங்க ளில் பதிவாகியுள்ள வாக்கு எண்ணிக் கைகளின் படி நகரப் பகுதிகளில் வாக்கு  எண்ணிக்கையானது குறைவாக பதிவா கியுள்ளது. எனவே அந்த பகுதிகளில்  வாக்கு எண்ணிக்கையை அதிகரிப் பதற்கு தேவையான அனைத்து விழிப்பு ணர்வு பணிகளையும் மேற்கொண் டுள்ளோம். பதட்டமான வாக்குச்சாவ டிகள் என தேர்தல் ஆணையத்திடம் ஒரு  அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளது. அதன்படி அந்தந்த வாக்குச்சாவடிகள் அனைத்தும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் தொடர் ஆய்வு மேற்கொள் வார்கள். வாக்குப் பெட்டிகளை வைப்பதற் கும், அந்த இடத்தை சுற்றிலும் பாதுகாப் புகள் போடுவதற்கும் தேவையான நட வடிக்கைகளையும் எடுப்பதற்கு அறிவு றுத்தி உள்ளோம். குறிப்பாக போலி வாக்காளர்களை கண்டறிவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளது. அது முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும்.  தேர்தல் பத்திரங்கள் குறித்து கேள் விக்கு பதிலளித்த அவர், தேர்தல் பத்தி ரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்ற மும், இந்திய தேர்தல் ஆணையமும்  தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் மாநில தேர்தல் ஆணையம் எது வும் செய்ய முடியாது. எங்களுடைய பணிகளை நாங்கள் சிறப்பாக செய்து வருகிறோம். தற்போது முதியவர்கள் தங்களது வாக்குப் பதிவுகளை செலுத் துவதற்கு 85 வயது நிர்ணயம் செய் துள்ளோம்.

அதை தாண்டி அவர்களின்  இருப்பிடங்களுக்கே சென்று வீடியோ  காட்சிகள் பதிவு செய்வதுடன், வாக்க ளிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அதேபோல அரசு காப்பகங்கள் மற் றும் தனியார் காப்பகங்களில் உள்ள  முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனா ளிகள் வாக்குப்பதிவு செலுத்துவதற்கு  தேவையான அனைத்து வழிகாட்டு தல்களும் வெளியிடப்பட்டுள்ளது. முறையாக அனைவரும் வாக்குப்ப திவு செய்ய நடவடிக்கை எடுக்கப்ப டும். குறிப்பாக வங்கிகள் மற்றும் தனி யார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்ப டும். டிஜிட்டல் முறையில் வாக்காளர்க ளுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்படு கிறதா? அதேபோல சட்ட விரோதமாக அதிக அளவிலான பணம் டிஜிட்டல் முறையில் எந்த வகையில் பரிமாற்றம்  செய்யப்பட்டாலும், அவை உடனடி யாக தடுத்து நிறுத்துவதற்கு தேவை யான தொடர் நடவடிக்கைகள் எடுக் கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்தல்  பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதற் காக துணை ராணுவத்தினர் கோவை வந்துள்ளனர். தொடர்ந்து வரும் நாட்க ளில் கூடுதலாக துணை ராணுவத்தி னர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட உள்ளனர். அதற்காக அவர்கள் அனைவரும் விரைவில் வருவார்கள்” என்றார். நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் நிலை யில், அரசியல் கட்சியினர் தேர்தல் தயா ரிப்பு பணியில் முனைப்புடன் ஈடுப் பட்டு வருகின்றனர்.அதே நேரத்தில் அரசு நிர்வாகமும் தேர்தல் பணிக் காக முழுவீச்சில் ஈடுப்பட்டு வரு வது குறிப்பிடத்தக்கது.