உதகை, செப்.24- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) நீலகிரி கிளை யின் 19ஆவது பொதுப் பேரவைக் கூட்டம் சனியன்று ஒய்டபில்யூசிஏ ஆனந்தகிரி யில் நடைபெற்றது. இந்த பேரவைக் கூட் டத்திற்கு, ஆர்.ராஜேந்திரன் தலைமை ஏற்றார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் நாகராஜ் துவக்கி வைத்தார். செயலாளர் ஏ.சண்முகம், பொரு ளாளர் ரபீக் ஆகியோர் அறிக்கை சமர்ப்பித் தனர். மண்டலச் செயலாளர் டி.கோபால கிருஷ்ணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.வினோத், பொருளாளர் நவீன் சந்திரன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் டி.ஜெய்சங்கர் சிறப்புரையாற்றி னார். இப்பேரவையில், கேங்மேன் பணியிடங் களை உடனடியாக நிரப்ப வேண்டும். மின் வாரியத்தில் தனியார் மயத்தை புகுத்தக் கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. இதில் தலைவராக ஆர்.ரவி சண்முகம், செயலாளராக ஏ.சண்முகம், பொருளாள ராக கே.வேல்முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மின் ஊழியர் மத்திய அமைப்பின் உதகை கோட்டச் செயலாளர் ஜெகநாதன் நன்றி கூறினார்.