சேலம், ஆக.30- 71 ஏரிகளை இணைக்கும் காவிரி - சரபங்கா நீரேற்ற திட்டத்தின் மூலம் விலை நிலங்களை அழிக் கும் வருவாய்த்துறையின் அராஜ கத்தை கண்டித்து செப்.4 ஆம் தேதியன்று போராட்டம் நடை பெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. சேலம் மாவட்டம், மேற்கு பகுதி யில் 71 ஏரிகளை இணைக்கும் வகை யில் காவிரி - சரபங்கா நீரேற்ற திட் டம் செயல்படுத்தப்பட உள்ளது. விவசாயிகளை பாதிக்காமல் இத்திட் டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனா லும், விவசாயிகளின் கோரிக்கை களை ஏற்காமல், விருதாசம்பட்டி கிராமத்தில் அராஜகமாக காவல் துறை துணையுடன் விவசாய விளை நிலங்களை வருவாய்த்துறையினர் கையகப்படுத்தி வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, நிலத்தை கையகப்படுத்து வதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளது. எனவே, சுமூக பேசி விவசாயிகள் சம்மதத்துடன் நிலத்தை எடுக்காமல், அராஜக மாக விலை நிலங்களை ஆக்கிர மிப்பு செய்யும் வருவாய்த்துறை யின் அடாவடி செயலுக்கு எதிராக அப்பகுதி விவசாயிகள் கொதித் துள்ளனர். இந்நிலையில், விவசாய நிலங் களை அழித்து, திட்டத்தை செயல் படுத்த துடிக்கும் வருவாய்த்து றையை கண்டித்து, மேட்டூரில் செப்.4 ஆம் தேதியன்று நடைபெற உள்ள போராட்டத்தில் விளைநிலங்களை பாதுகாக்க துடிக்கும் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி அழைப்பு விடுத்துள்ளார்.