கோவை, ஜூலை 22- பொதுத்துறை நிறுவன மான பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் மூலம், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை யில் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திடீரென கட்டண உயர்வை அறிவித்த நிலையில், பலர் தங்களது தொடர்பு எண்களை ஒன்றிய அர சின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ் என்எல்-க்கு மாறி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, பொதுத்துறை நிறு வனமான பிஎஸ்என்எல் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு தேவையான நிதியுதவியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும். தொலைத்தொடர்பு துறை யில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி வாலிபர் சங்கம் சார்பில் திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்கத் தின் மாவட்டப் பொருளாளர் தினேஷ் ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அர்ஜுன் கோரிக்கையை விளக்கி பேசினார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் ரமேஷ், சக்தி வேல், ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். முடிவில், மாவட்ட துணைத் தலைவர் மணி பாரதி நன்றி கூறினார்.