ஈரோடு, ஜூலை 20- ஈரோடு பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப் பந்த தொழிலாளர் சங்கத் தினர் 4 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது. கிளாஸ்டர் முறையிலான அவுட்சோர்சிங் முறையில் பணி புரியும் தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அரசு விதி களின் படி ஊதியமும், பலன்களும் வழங்க வேண்டும். தற்காலிக ஊழியர்களுக்கு 7 ஆவது ஊதியக்குழு பரிந்துரையை அம லாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.தம்பி கலையான் தலைமை ஏற்றார். ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச் செயலர் கே.பழனிச் சாமி வரவேற்றார். கோரிக்கை விளக்கி ஒப் பந்த ஊழியர் சங்க மாநிலச் செயலர் எம். சையத் இத்ரீஸ் உரையாற்றினார். ஓய்வூதியர் சங்க மாநிலத் துணை தலைவர் என்.குப்பு சாமி, மாவட்டச் செயலாளர் எஸ்.பாலு ஆகி யோர் வாழ்த்தி பேசினர். முடிவில் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ். சரவணன் நன்றி கூறினார்.