districts

தென்னிந்தியாவில் 4 தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறாது - ஆர்.எஸ்.பாரதி பேச்சு

கோவை, ஆக.31- 2024 நாடாளுமன்ற தேர்தலில் தென் னிந்தியாவில் 120 தொகுதிகளில் 4  தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி  பெறும் மற்ற தொகுதிகளில் படு தோல்வி அடையும் என திமுக அமைப்பு  செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கோவை யில் நம்பிக்கை தெரிவித்தார். கலைஞரின் நூற்றாண்டு விழாவை யொட்டி, கோவை வடக்கு மாவட்டம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதி  கழகம் சார்பில், பகுதி கழக செய லாளர் ஜெஎஸ்.சரத் விக்னேஷ்  தலைமையில், கவுண்டம்பாளையத் தில் திமுக பொதுக்கூட்டம் நடை பெற்றது.  திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு பேசு கையில், இதே இடத்தில் கடந்த காலங் களில் பேசக்கூடாது என எனக்கு தடை விதித்த காலம் உண்டு. அதன்பிறகு நீதி மன்றம் சென்று இங்கு பேசினேன்.  இன்று தமிழகத்தில் 100 ல், 90 பேர்  உயர்ந்த பதவியில் இருக்கின்றார்கள் என்றால், அதற்கு காரணம் கலைஞர்.  கவுண்டர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட் டோர் ஆக அறிவித்தார். இதன்காரண மாக அரசுத்துறையில் ஐஏஎஸ், ஐபிஎஸ்  உள்ளிட்ட பல்வேறு பெரிய பொறுப் புகளுக்கு இச்சமூகத்தை சேர்ந்தவர் கள் சென்றடைய வழிவகுத்தார். மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு  7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்து உள்ளது. சுங்க கட்டணத்தில் பல லட்சம் கோடி கொள்ளையடித்து உள்ளது. கொரோனா காலத்தில் உயிரி ழந்தவர்களின் பெயரில் ஊழல் நடந் துள்ளது. அதிமுக எங்களின் பங்காளி கள், பாஜக என்னைக்குமே பகை யாளிகள். அதிமுக அனாதைகளாகி விட்டனர். அதனால் தான் அவர்கள் மீது  அனுதாபம் வருகின்றது.  

ஒன்றிய அரசின் ஊழலை முதல்வர் கள் அவர்கள் சுட்டி காட்டினார்கள். மோடியின் கனவில் கூட முதல்வர் ஸ்டாலின் தான் வருகின்றார். இந்தியா  கூட்டணியில் இன்னும் பலர் கூட உள்ள னர். இந்த கூட்டணியை பார்த்து மோடி  பயப்படுகின்றார். வரும் தேர்தலில் என்ன சொல்லி வாக்கு கேட்பது என  தெரியாமல், அமலாக்குத்துறை போன்ற வற்றால் மிரட்டுகின்றனர்.  ஈடியை வைத்தோ, வருமானவரித் துறையை வைத்தோ ஒன்றிய அரசால்  எதுவும் செய்ய முடியாது. செந்தில் பாலாஜி கோவையில் பொறுப்பேற்ற பிறகு திமுக உள்ளாட்சி தேர்தலில் 100  க்கு 100 வெற்றி பெற்றதை ஜீரணிக்க முடியாமல் கைது செய்துள்ளனர். ரூ.7.50 கோடியை முழுங்கிய நீங்கள்  விமானத்தில் வீதி வீதியாக செல் கிறீர்கள். கடந்த ஒருவாரமாக மோடி,  அமித்ஷா, அண்ணாமலை இந்த ஊழல்   தொடர்பாக வாய் திறக்க வில்லை. 2024  தேர்தலில் பாஜக எங்கெங்கு எல்லாம் வெற்றி பெற்றதோ, அங்கெல்லாம் பாஜக தோல்வி அடையும். தென்னிந் தியாவில் 120 தொகுதியில் 4 தொகுதி யில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்.  இந்த தேர்தல் முடிந்தவுடன் தமிழ கத்தில் பெரும் மாற்றம் வரும் என் றார்.  முன்னதாக, நூற்றுக்கும் மேற்பட் டோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டது. இந்த பொதுக் கூட்டத்தில் வடக்கு மாவட்டச் செயலாளர்  தொ.அ.ரவி, கழக மாணவரணி தலை வர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி உள்ளிட்ட  திரளானோர் பங்கேற்றனர்.