districts

img

உணவு பாதுகாப்புத்துறை அலுவலரை மிரட்டிய பாஜக நிர்வாகி - காவல் நிலையத்தில் புகார்

நாமக்கல் மார்ச் 12- உணவு பாதுகாப்பு அதிகா ரியை பணி செய்ய விடாமல் தடுத்து  மிரட்டி பாஜக நிர்வாகி மீது குமார பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபா ளையம் உணவு பாதுகாப்பு துறை  அலுவலராக ரங்கநாதன் பணி யாற்றி வருகிறார். இவர் பள்ளிபா ளையம், வெப்படை, குமாரபா ளையம் போன்ற பகுதிகளில் அடிக் கடி சோதனை மேற்கொண்டு, தடை  செய்யப்பட்ட புகையிலை பொருட் கள் பறிமுதல் செய்துள்ளார். இதன்  காரணமாக புகையிலை பொருட் கள் பதுக்கல் வெகுவாக குறைந் துள்ளது. இந்நிலையில் வெப் படை குமாரபாளையம் சாலை யில் மேட்டுக்கடை என்ற பகுதி யில் செயல்பட்டு வரும் பேக்க ரியை, உணவு பாதுகாப்புத் துறை  அதிகாரி சோதனை மேற்கொண் டார். பேக்கரி நடத்துவற்கான அனு மதி எதுவும் பெறாமல் பேக்கரி செயல்படுவதை சுட்டிக்காட்டிய அதிகாரி உடனடியாக அனுமதிப் பெறும்படி அறிவுறுத்தி உள்ளார். இதனிடையே திங்களன்று மாலை பேக்கரியில் உணவு பாது காப்புத் துறை அதிகாரி திடீராய்வு மேற்கொண்டார். அப்பொழுது அனுமதி பெறாமல் பேக்கரி நடத் தியதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினார். பின்பு அங்கு இருந்த கடை யின் உரிமையாளர் கதிரேசன் தான் பாஜக வடக்கு ஒன்றியத் தலை வர் எனக் கூறி ஆபாசமான வார்த் தைகளைப் பேசி, மிரட்டல் விடுத்து  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  இதனையடுத்து,  அங்கிருந்து அதிகாரி ரங்கநாதன் புறப்பட்டு  சென்ற பொழுது அவரை மறித்து  அவரிடம் காரசார வாக்குவாதத் தில் கதிரேசன் ஈடுபட்டுள்ளார். இத னால் அப்பகுதியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கிருந்து வெளியேறிய உணவு பாதுகாப்பு அதிகாரி ரங்கநாதன் சம்பவம் குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து  குமாரபாளையம் காவல் நிலையத் தில் தன்னை பணி செய்ய விடா மல் கதிரேசன் தடுத்து மிரட்டிய தாக உணவு பாதுகாப்பு துறை அதி காரி அளித்த புகாரின் அடிப்படை யில் குமாரபாளையம் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.  இந்நிலையில் உணவு பாது காப்புத்துறை அதிகாரி மற்றும் பேக்கரி உரிமையாளர் கதிரேசன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடு படும் காணொளி காட்சிகள் தற் போது சமுக வலைதளத்தில் பரவி  வருகிறது.