districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

காலமானார்

கோவை, ஜூலை 12- மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை கிழக்கு நகரக்குழு  செயலாளரும், சிஐடியு தனி யார் பாதுகாவலர் சங்க பொதுச்செயலாளருமான என்.செல்வராஜின் தாயார் என்.கொண்டம்மாள் (98) புதனன்று சின்னவேடம்பட்டி யில் உள்ள அவரது இல்லத் தில் காலமானார். இவரின் மறைவு செய்தியறிந்து. மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள், சிஐடியு உள்ளிட்ட  வர்க்க வெகுஜன சங்கங்க ளின் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். மறைந்த என். கொண்டம்மாள் உடல் வியா ழனன்று (இன்று) காலை 12  மணிக்கு பாப்ப நாயக்கன் பாளையத்தில் உள்ள மின்  மயானத்தில் தகனம் செய் யப்பட உள்ளது.

சிறுவன் சந்தேக மரணம்

சூலூர், ஜூலை 12- கோவை மாவட்டம், சூலூர் அடுத்த கலங்கல் கிரா மத்தில் தனியாருக்கு சொந்த மான பஞ்சாலை செயல் பட்டு வருகிறது. இந்த பஞ் சாலையில் அசாம் மாநிலத் தைச் சேர்ந்த ஜாகிர் உசேன்  என்பவர் தன் மனைவி கைரோன், 7 வயது மகன்  கைரோல் இஸ்லாமுடன் தங்கி வேலை செய்து வரு கிறார். சிறுவனான கைரோல்  இஸ்லாம் மில்லில் தங்கி யுள்ள சிறுவர்களுடன் தினந் தோறும் விளையாடுவது வழக்கம்.  இந்நிலையில் கைரோல் இஸ்லாம் உடலில் காயங் களுடன் மில் அருகே உள்ள  காட்டில் பிணமாக கிடந் துள்ளார். இதனையறிந்த ஜாகிர் உசேன் அங்கு சென்று பார்த்தபோது முகத்தில் காயங்களுடன் சிறுவன் பிணமாக கிடந்துள் ளார். தகவலின் பேரில் சம் பவ இடத்துக்கு வந்த சூலூர் போலீசார் வழக்குப்பதிவு  செய்து, விசாரணையை முன் னெடுத்துள்ளனர்.

இன்று மின்தடை

தருமபுரி, ஜூலை 12- கடத்தூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட பொம்மிடி, வே.முத்தம் பட்டி, கே.என்.புதூர் ஆகிய துணை நிலையங்களில் வியாழனன்று (இன்று) மாதாந்திர பராமரிப்பு பணி கள் நடைபெற உள்ளன.  இதனால் பொம்மிடி, அஜ் ஜம்பட்டி, பி.பள்ளிப்பட்டி, வாசிகவுண்டனூர், பொ. துரிஞ்சிப்பட்டி, நடூர், ஓட்டுப் பட்டி, பில் பருத்தி, கேத்து ரட்டிப்பட்டி, வேப்பிலைப் பட்டி, வே.முத்தம்பட்டி, கே. மோரூர், கண்ணப்பாடி, கே. என்.புதூர், வத்தல்மலை, கொண்டகரஅள்ளி, ரேகட அள்ளி, திப்பிரெட்டிஅள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதி களில் வியாழனன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி  வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அமைச்சர் அறிவித்தபடி ஆக.15-இல் கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் விட வலியுறுத்தல்

திருப்பூர், ஜூலை 12 – கீழ்பவானி பாசனப் பகுதிகளுக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி  தண்ணீர் திறக்கப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி அறி வித்தபடி தண்ணீர் விட வேண்டும் என கீழ்பவானி விவசா யிகள் நலச் சங்கம் கூறியுள்ளது. வழக்கம்போல் கீழ்பவானி பாசனத்திற்குத் தண்ணீர் விடப் படும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் மஞ்சள், கரும்பு,  வாழை, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். ஆகஸ்ட் 15ஆம் தேதி கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறக் கப்படும் என்ற அமைச்சர் முத்துசாமியின் அறிவிப்பை பாசன  விவசாயிகள் நலச்சங்கம் வரவேற்கிறது. நெடுஞ்சாலைத் துறை போக்குவரத்து பாலங்கள் கட்டி  வருவதை காரணம் காட்டியும், கால்வாய் மராமத்துப் பணிகள்  முற்றுப்பெறாமல் இருப்பதை சொல்லியும் தண்ணீர் விடும்  தேதி தள்ளிப் போய் விடக் கூடாது. எனவே வரும் 28ஆம்  தேதிக்குள் அரசு ஆணை மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை  வெளியிட வேண்டும் என்று கீழ்பவானி பாசன விவசாயிகள்  நலச்சங்கத் தலைவர் நல்லசாமி கேட்டுக் கொண்டிருக்கி றார்.

மக்கள்தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர், ஜூலை 12 - உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு  நிகழ்ச்சி சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் செவ்வா யன்று நடைபெற்றது. இதில், “பாலின சமத்துவ சக்தியை கட்டவிழித்து விடுதல்,  நமது உலகின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளை திறக்க  பெண்கள் மற்றும் சிறுமிகளின் குரல்களை மேம்படுத்துதல்”  என்பதை மையக் கருத்தாக கொண்டு நாட்டு நலப்பணித்  திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரி வளாகத்தில் உள்ள  குமரன் அரங்கில் மக்கள் தொகை தின விழிப்புணர்வு  நிகழ்வு நடைபெற்றது.

தென்னை விவசாயிகள் போராட்ட எதிரொலி அரசிடம் கோரிக்கையை கொண்டு செல்வதாக கோவை ஆட்சியர் அறிவிப்பு

சூலூர், ஜூலை 12- தேங்காய் கொள்முதல் விவகாரத்தை அரசின் கவனத் திற்கு கொண்டு செல்ல உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சி யர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், சூலூர், செஞ்சேரி புத்தூரில் அரசின்  நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மக்கள்  தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் 93 பயனாளிகளுக்கு ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். அப்போது ஆட்சியர் பேசுகையில், விவசாயிகள் பிரச்ச னைகள் உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் கொப்பரைத் தேங்காய் வாங்கு வதை ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் நிறுத்தியுள்ளது. இது தொடர்பாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரு கிறார்கள். இது குறித்து அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான தீர்வு எட்டப்படும். மேலும், தற்போது, மகளிர் உரிமைத்தொகைக்கான கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாக கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.

தண்டவாளத்தில் ஆசிரியர் சடலம் சாதி ஆணவப்படுகொலையா?

ஈரோடு, ஜூலை 12- பாசூர் அருகே ரயில் பாதையில் கிடந்த அரசு பள்ளி ஆசிரி யரின் சடலம் சாதி ஆணவப்படுகொலையா? என சந்தேகம் எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், கொமார பாளையத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல் மகன் கார்த்திக் (28). இவர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்று கடந்த 8  மாதங்களுக்கு முன் ஈரோடு மாவட்டம், பாசூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பொருளியல் பிரிவு ஆசிரியராக பணி யில் சேர்ந்தார். கடந்த திங்களன்று பாசூர் அருகே ரயில் பாதை யில் உடல் சிதைந்த நிலையில் சடலமாக கிடந்தார். மணிக்கட் டில் காயம் இருந்தது. சிறிது தொலைவில் அவரது இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் இரத்த கரை இருந்தது. அவ்வழியாகச் சென்றவர்கள் இதனைப்பார்த்து காவல்துறை யினருக்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து காவல் துறையினர் பிரேதத்தை மீட்டு ஈரோடு அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.  கார்த்திக்கின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்து பிரேதத்தைப் பார்த்த பிறகு, கார்த்திக்கின் மரணத்தில் சந் தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறை யினர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதற்கிடையில் ஆசிரியர் கார்த்தி. பாசூர் பகுதியில் வேறு ஒரு சமூகத்தை சேர்ந்த பெண்ணுடன் காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்பிரச்சனையால் கார்த்திக் கின் மரணம் சாதி ஆணவக்கொலையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கொடநாடு வழக்கு: செல்போன்களை ஆய்வு செய்ய மனு

உதகை, ஜூலை 12- கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத் தில் ஒப்படைக்கப்பட்ட கனகராஜ் உட்பட குற்றம் சாட்டப்பட்ட 8 பேரின் செல்போன் களை ஆய்வு செய்ய சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர். நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட் டில் கடந்த 2017 ஆம் ஆண்டு, ஏப்.24 ஆம் தேதி யன்று கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொலை  செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக  சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற  பிஜின் ஆகியோரை கைது செய்தனர். இந்த  வழக்கில் தொடர்புடைய ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண் டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர்,  கொடநாடு சம்பவ வழக்கு விசாரணை மீண் டும் தீவிரமடைந்து உள்ளது. இந்த வழக்கில் 316 பேரிடம் மறு விசாரணை நடத்தப்பட்டது.  இதற்கிடையே, வழக்கு விசாரணை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, தனிப்படை கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண மூர்த்தி தலைமையான தனிப்படையினர், சீல் வைக்கப்பட்ட விசாரணை அறிக்கையை  ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஒப்ப டைத்தனர். இதற்கிடையே கோவை சிபிசிஐடி கூடுதல் துணை ஆணையர்  முருகவேல் விசா ரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவ ரது குழுவில் 49 பேர் நியமிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு விசாரணை தீவிரமாக நடை பெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சிபிசிஐடி போலீசாரின் இடைக்கால விசாரணை அறிக்கையை ஏன் தாக்கல் செய்யவில்லை என்று நீதிபதி மாவட்ட நீதி பதி அப்துல் காதர் கேள்வி எழுப்பி இருந் தார். இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜ் மற்றும் அவ ரது சகோதரர் தனபால் உட்பட குற்றம் சாட்ட பட்டுள்ளோர்களிடம் இருந்து பறிமுதல் செய் யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கபட் டுள்ள 8 செல்போன்களில் பதிவாகியுள்ள தக வல்களை ஆய்வு செய்ய கோவையில் உள்ள  ஆய்வகத்திற்கு அனுப்ப வலியுறுத்தி சிபிசி ஐடி போலீசார் ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிபதியிடம் செவ்வாயன்று மனு  தாக்கல் செய்தனர். ஆனால், மனுவை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளவில்லை.