கோவை, ஜூலை 10- காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை குறித்து அவதூறாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அண்ணாமலை யின் படத்தை கிழித்தெறிந்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாய்க்கொழுப்பாக பேசியிருந்தார். இது காங்கிரஸ் கட்சியின் வட்டாரத்தில் பெரும் கொந் தளிப்பை ஏறபடுத்தியது. இதன் ஒருபகுதியாக கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் வடக்கு மாவட்டத் தலைவர் வி.எம்.சி மனோக ரன் தலைமையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதனன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணா மலையின் புகைப்படத்தை கிழித்து எரிந்து ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். மேலும் கண்டன முழக்கங்களையும் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கவுன்சிலர்கள் சங்கர், காயத்ரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.