அவிநாசி, மார்ச் 10 – திருமுருகன்பூண்டி அருகே அம்மா பாளையத்தில் தனியார் பேருந்தில் சிக்கி பலியான பெண் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவினாசி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றியக் கவுன்சிலர் முத்து சாமி தலைமையில் அனைத்து கட்சி கூட் டம் நடைபெற்றது. இதில் தி.மு.க ஒன் றிய செயலாளர் பழனிச்சாமி, மார்க் சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பி னர் நந்தகோபால், மாவட்டக்குழு பழ னிச்சாமி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், மதிமுக சேர்ந்த பெருமாள், பாபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முகமது யாசின், சேக்ஸ்பியர், கொமதேக ராஜ்குமார், விபத்தில் பலி யான பெண்ணின் தந்தை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, விபத்தில் பலியான பெண் ணுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் ஒரு பெண்ணுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், மற் றொரு பெண்ணுக்கு படிப்பு செலவை அரசை ஏற்க வேண்டும், அரசு பேருந்து கள் அவிநாசி, தெக்கலூர் வந்து செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை மனுவை கொடுக்கத் தீர்மானித்தனர்.