districts

img

அரசியல் பாவம் செய்த அதிமுக, பாமக: ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு

சேலம், ஏப்.11- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவளித்து அதிமுக, பாமக அர சியல் பாவம் செய்துள்ளதென சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித் துள்ளார். இந்தியா கூட்டணி சார்பில் சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் போட் டியிடும் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து, சாமி நாதபுரம் பகுதியில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் தேர்தல் பரப்புரையில் பங்கேற்றார். அப்போது அவர் பேசு கையில், மாநில உரிமைகளை பறித்து நாட்டு மக்களின் வாழ்வா தாரத்தை சீர்குலைத்த மோடி அர சாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடே கேள்விக்குறியாக மாறிவிடும். அனைத்துத்துறைகளின் செயல் பாடுகளையும் சூறையாடிய மோடி  அரசு, ஏழை, எளிய மக்களின் நலன் மீது அக்கறை காட்டாமல், பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகவே இதுவரை செயல்பட்டு வந்துள்ளது. மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல் படுத்தி மக்களின் ஒற்றுமைக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். இச்சட் டம் அதிமுகவும், பாமக நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித் தததால் நடைமுறைப்படுத்தப்படு கிறது. இதன்மூலம் அதிமுக, பாமக ஆகியவை அரசியல் பாவம் செய்த வர்களாக கருதப்படுகின்றனர். நாட் டின் இறையாண்மைக்கு சவால் விடும் போக்கையே பாஜக செய்து வரு கிறது. சிறு, குறு தொழில்களை ‘காலி’ செய்த பெருமை பாஜகவையே சாரும். ஆண்டிற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவதாக தெரி வித்து இன்று இளைஞர்கள் வேலை யில்லா திண்டாட்டத்தில் இருக்க காரணமே பாஜகவின் செயல் தான். இதனால் தான் பாஜக ஆளும் மாநி லங்களில் இருக்கும் இளைஞர்கள் அதிகமாக தமிழகத்திற்கு வேலை  தேடி வருகிறார்கள். கூட்டணி சேர்ந்து  விட்டால் பாஜக செய்த தவறை மறைத்து பேசுவது பாட்டாளி மக் கள் கட்சியினருக்கு நல்லதல்ல. உலக மகா ஊழல் கட்சியாக பாஜக இருக் கிறது. பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகம் பேர் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களாகவே உள்ளனர். தமிழ்நாட்டில் கட்டப்ப டாத எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று பெரிய அளவில் பொய் பிரச்சாரத்தில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை தனது கட் டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து வருகின்றனர். பாஜக இனி  என்ன செய்தாலும், வரும் நாடாளு மன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார்.  இந்நிகழ்வில் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, திமுக மத் திய மாவட்ட செயலாளர் ராஜேந்தி ரன் எம்எல்ஏ, காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் பாஸ்கர், சிபிஎம் மாவட்டச் செயலாளர் மேவை.சண் முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஆர்.வெங்கடபதி, வடக்கு மாந கரச் செயலாளர் என்.பிரவீன் குமார் உட்பட திரளானோர் கலந்து கொண் டனர்.