districts

img

பழுது நீக்கும் கடையில் குவியும் மின்விசிறிகள், ஏர்கூலர்கள்

நாமக்கல், ஏப்.26- கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வீடுகளில் பழு தான நிலையில் கிடக்கும் மின்விசிறி கள், ஏர்கூலர் உள்ளிட்ட குளிரூட் டும் சாதனங்களை பழுது நீக்கக் கோரி கடைகளில் குவித்து வருகின் றனர். தமிழகம் முழுவதும் இதுவரை யிலும் இல்லாத அளவு வழக் கத்தை காட்டிலும் அதிகளவு கோடை வெயில் கொளுத்தி வருகிறது.  வெயில் தாக்கத்தின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் வெயில் தாக்கத்தால் வய தான முதியவர்கள், மூதாட்டிகள் உயிரிழந்த சம்பவமும் அரங்கேறி வருகிறது. அதிகபட்சமாக இந்தியா விலே வெயில் தாக்கம் அதிகம் உள்ள பகுதியாக மூன்றாவது இடத்தை ஈரோடு பிடிக்கும் அள விற்கு வெயில் வாட்டி வதைத்து  வருவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெயில் அதிக ரிப்பதற்கு பலரும் பல்வேறு கார ணங்களை கூறி வரும் நிலையில், தொடர்ந்து இன்னும் ஒரு மாதத் திற்கு முழுமையாக வெயில் காலம் என்பதால் நிலைமை இன்னும் மோசமாகும் என இப்போது மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் எழுந் துள்ளது. இந்நிலையில், வெயில் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள் வதற்காக உடலில் நீர்ச்சத்தை அதி கரிக்கும் இளநீர், நுங்கு, வெள்ளரிக் காய், தர்பூசணி என இயற்கை பானங் கள் மேல் மக்கள் கவனம் திரும்பி னாலும், தகிக்கும் வெயிலை சமா ளிக்க பலரும் வெளியில் வருவதை தவிர்த்து வீடுகளில் முடங்கி விடு கின்றனர். அப்படி வீடுகளில் முடங் கும் பொது மக்களுக்கு போதுமான அளவில் காற்றோட்ட வசதி இல்லா ததால், தற்போது எலக்ட்ரானிக் கடைகளில் புதிதாக ஏர் கூலர், மின் விசிறிகள், ஏசி உள்ளிட்ட பொருட் களை வாங்க பொதுமக்கள் ஆர் வம் காட்டி வருகின்றனர். மேலும், ஏற்கனவே பயன்பாட் டில் உள்ள மின்விசிறிகள், ஏர் கூலர் உள்ளிட்டவை பழுது ஏற்பட்டுள்ள தால், அதை சரி செய்து தர வேண் டும் என பள்ளிபாளையம் திருச் செங்கோடு சாலையில் செயல்ப டும் மின்விசிறி பழுது நீக்கும் கடை களில், மின்விசிறிகள், ஏர்கூலர் கள் பழுது பார்ப்பதற்காக வாடிக் கையாளர்களால் கொண்டு வந்து  வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்விசிறி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பழுது நீக்கும் கடை வைத்திருக்கும் நல்லசாமி என்பவர் கூறுகையில், கடந்த 15 ஆண்டு களுக்கு மேலாக இந்த தொழிலில் பணியாற்றி வருகிறேன். எப்போ தும் வழக்கமான நாட்களில் அதிக ளவு மிக்சி உள்ளிட்ட வீட்டு உப யோக பொருட்கள் தான் மக்கள் பழுது நீக்கம் செய்ய வேண்டுமென கொண்டு வந்து தருவார்கள். கடந்த ஒரு மாதமாக அதிகளவு மின்விசிறி கள் உள்ளிட்டவை பழுது நீக்கம் செய்வதற்காக பொதுமக்கள் கொண்டு வந்து தருகின்றனர். கூடுத லாக ஏசி, ஏர் கூலர் உள்ளிட்ட  குளிர்சாதன பொருட்களையும் கொண்டு வருகின்றனர். வெயிலின் தாக்கத்தை தவிர்க்க முடியாத  பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே  முடங்கி விடுகின்றனர். அப்படி வீட் டிற்குள் முடங்கினாலும் அனல் காற் றின் வெப்பம் தாங்க முடியாமல் கூடுதல் மின்விசிறிகளை பயன்ப டுத்துகின்றனர். ஏற்கனவே பயன்பாட்டில் உள் ளது பழுதாகிய நிலையில் இருப்ப தால், அதை முறையாக பராமரித்து வேகமான முறையில் மின்விசிறி கள் செயல்படும் வகையில் சரி  செய்து தருமாறு வாடிக்கையா ளர்கள் கேட்டுக்கொள்கின்றனர். கடந்த சில மாதங்கள் வரை குளிர் காலம் என்பதால் பொதுமக்கள் பெரிதாக மின்விசிறி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை பயன் படுத்த ஆர்வம் காட்டவில்லை. தற் போது வெயில் வாட்டி வதைப்ப தால் பொதுமக்கள் வேறு வழி யின்றி எங்களிடம் பழுதான தங்க ளுடைய பொருட்களை கொண்டு வந்து தருகின்றனர். எங்களுக்கும் கூடுமான வரை வேலை வாய்ப்பு  கிடைப்பதால் மகிழ்ச்சி அடைந்துள் ளோம். இருந்த போதிலும் கடையி லிருந்து பணிபுரியும் எங்களா லேயே வெயில் தாக்கத்தை சமா ளிக்க முடியாததால் மதிய நேரத் தில் கட்டாயமாக மூன்று முதல் நான்கு மணி நேரம் நாங்கள் பணி  செய்வதை நிறுத்தி விடுகிறோம்.  ஏனெனில், அந்த அளவிற்கு வெயில் கொளுத்துவதால் மிகுந்த சோர் வான நிலை ஏற்படுகிறது, என் றார்.