districts

img

மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து டிசம்பரில் மாநிலம் தழுவிய தர்ணா

உதகை, அக்.28- மின்வாரிய ஓய்வு பெற் றோர் நல அமைப்பின் சார் பில் பத்து அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி டிசம்பர்  மாதத்தில் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் மற்றும் அடுத்தடுத்து தொடர்  போராட்டங்களில் ஈடுபடுவது என உதகை யில் நடைபெற்ற மின்வாரிய ஓய்வுபெற் றோர் நல அமைப்பின் கூட்டத்தில் முடிவெடுக் கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில்,  மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மண்டல கூட்டம் சிஐடியு அலுவலகத்தில் மண்டலச் செயலாளர் வி.மைக்கேல் தலை மையில் நடைபெற்றது. இதில், மாநில துணைத்தலைவர் என்.சின்னசாமி துவக்கி வைத்து உரையாற்றினார்.  இதில், மின்வாரியத்தை தனியார் மய மாக்கும் அரசின் நடவடிக்கையை கண்டித் தும், பழைய பென்சன் திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும். 70 வயது ஓய்வூ தியர்களுக்கு 10 சதவிகிதம் பென்சனை உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், இக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை மேற்கொள்வது என்றும்,  டிசம்பர் மாதம் மாநிலம் தழுவிய தர்ணா  போராட்டம், பிப்ரவரியில் சென்னை மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிடுவது என முடிவெடுக்கப்பட்டது.  முன்னதாக இக்கூட்டத்தில், கோவை மண்டலத்திற்குட்பட்ட கோவை கிளை, குந்தா கிளை, பாலக்காடு கிளை, திருச்சூர்  கிளை, திருப்பூர், உடுமலை, உதகை கிளை,  கூடலூர் கிளை, மலப்புரம் கிளை உள்ளிட்ட பகுதியில் இருந்து பங்கேற்றனர்.