சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குள் புகுந்த நபர் அரசு பேருந்தில் பாய்ந்து தற்கொலை
கோவை, ஜூன் 13- பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் உள் நுழைந்த நபர் அரசு பேருந்தில் மோதி தற்கொலை செய்து கொண்ட காட்சிகளை போலீ சார் வெளியிட்டனர். கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனி வாசன் அலுவலகத்திற்குள் புகுந்த நபரை பாஜக அலுவலக ஊழியர் ஒருவர் மனிதாபிமானமே இல்லாம தள்ளி விட்ட காட்சிகள் வைரலானது. இந்நிலையில், சம்மந்தப்பட்ட பாஜக அலுவலகத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் அவிநாசி சாலையில் வாகனம் மோதி உயிரிழந்த நிலையில் மீட்டெடுக்கப்பட்டார். பின்னர் அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்நிலையில், அந்த அடையாளம் தெரியாத நபர் அரசு பேருந்து முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றது தற்போது கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கோவை மாநகர காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். கண்காணிப்பு கேமரா காட்சியில் அந்த அடையாளம் தெரியாத நபர் சாலையைக் கடந்து வந்து எதிர்ப்புறமாக வந்த அரசு பேருந்து முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன் றுள்ளார், ஆனால் பேருந்து ஓட்டுநர் இவர் வந்ததை கண்டு பேருந்தை திருப்பிட பேருந்தின் பின்புற சக்கரத்தில் சிக்கி உயிழந்தார். இக்காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்நிலையில், உயிரிழந்தவர் யார்? எதற்காக தற் கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை ஆசிரியரின் மனைவியும் கைது
கோவை, ஜூன் 13- ஆசிரியரின் பாலியல் தொல்லையால் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், ஆசிரியரின் மனைவியும் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை, உக்கடம் கோட்டைமேட்டை பகுதி 17 வயது மாணவி பிளஸ் 2 படித்து வந்தார். இவர் 2021ஆம் ஆண்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது அறையில் சோதனை செய்த போது, ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், மாணவி படித்த தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி (35) தனக்கு பாலியல் தொல்லை அளித்த தாகவும், தலைமையசிரியர் மீரா ஜாக்சன் மற்றும் மிதுனின் மனைவி அர்ச்சனாவிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அனைத்து மகளிர் போலீ சார், மிதுன் சக்ரவர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆசிரியரின் பாலியல் தொல் லையால் மாணவி கடிதம் எழுதி விட்டு தற் கொலை செய்த சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மாணவி கடிதத்தில் மேலும் 2 பேர் மீதும் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, கடிதத்தின் உண்மை தன்மை ஆராயப்பட்டது. அது மாணவி யின் கையெழுத்து என உறுதியான நிலை யில், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறுமி முன்னர் வசித்த பக்கத்து வீட்டுக்காரர்கள் மனோஜ்ராஜ் மற்றும் முகமது சுல்தான் ஆகிய இருவரை யும் கைது செய்தனர். மேலும், ஆசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி தலைமையாசிரியர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின்னர் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மனைவி அர்ச்சனாவை (32) கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் திங்களன்று கைது செய்தனர். அர்ச்சனாவும், தனது கணவர் பணிபுரிந்த அதே தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். அப்போது மாணவி, தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து அர்ச்சனாவிடம் கூறி உள்ளார். மேலும், செல்போனில் அர்ச்சனாவிடம் பேசும் ஆடியோவை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அர்ச்சனா கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மரங்கள் வெட்டி கடத்தல்: விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
நாமக்கல், ஜூன் 13- கொல்லிமலை வனப்பகுதியில் சட்ட விரோதமாக மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைய நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக கொல்லிமலை திகழ்ந்து வருகிறது. இங்கு பலா, சில்வர் ஓக், தேக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் இருக்கும் மரங்களை வெட்ட தடை விதிக் கப்பட்டுள்ளது. பட்டா நிலங்களில் உள்ள பல வருடங்கள் ஆன மரங்களை வெட்டி விற்க, நில உரிமையாளர்கள் விண்ணப்பித் தால் ஆட்சியர், வன அலுவலர் தலைமை யிலான குழுவினர் ஆய்வு செய்து, குறிப் பிட்ட மரங்களை மட்டும் வெட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், மரங் களை வெட்ட ஒரு பகுதியில் மட்டும் அனுமதி வாங்கிக்கொண்டு, கொல்லிமலை யில் பல இடங்களில் சட்ட விரோதமாக வியா பாரிகள் மரங்களை வெட்டி கடத்திச் செல்வ தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், ஞாயிறன்று இரவு கொல்லிமலை பகுதியில் பல்வேறு இடங் களில் வெட்டப்பட்ட மரங்களை 6 லாரிகளில் லோடு ஏற்றி, உள்ளே மரங்கள் இருப்பது தெரி யாமல், தார்பாய் போட்டு மூடி அடிவாரத் தில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடி அருகே நிறுத்தி வைத்திருந்தனர். இதன் பின் திங்களன்று அதிகாலை, எவ்வித சோத னையுமின்றி எடுத்துச்செல்ல அனுமதிப் கப்பட்டதாக சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா கூறுகையில், இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலரை உடனடியாக விசா ரித்து, தவறு இருந்தால் நடவடிக்கை எடுக் கப்படும். மேலும், போலீசார் மூலம் கொல்லி மலையிலிருந்து வரும் வாகனங்களை சோத னையிட நடவடிக்கை எடுக்கப்படும், என் றார்.
திருமூர்த்திமலையில் வேகத்தடை அமைக்க ஆட்சியரிடம் மலைவாழ் மக்கள் கோரிக்கை
திருப்பூர், ஜூன் 13 – திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அருகே திருமூர்த் திமலையில் அதிவேக வாகனங்களைக் கட்டுப்படுத்த சாலை யில் நான்கு இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று திருமூர்த்திமலை செட்டில்மெண்ட் மலைவாழ் மக்கள் கோரியுள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் குறைதீர் கூட்டத்தில் திங்க ளன்று மலைவாழ் மக்கள் சார்பில் மணிகண்டன் உள்ளிட்டோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருமூர்த்திமலை சுற் றுலா தலம் என்பதால் அதிகளவில் வாகனங்கள் வந்து செல் கின்றன. திருமூர்த்திமலையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள் ளியும் உள்ளது. மிக அதிக வேகமாக வாகனம் வருவதால் பள்ளி குழந்தைகள், முதியோர் சாலையைக் கடந்து செல்ல பெரும் சிரமப்படுகின்றனர். கடந்த மே மாதம் சுற்றுலா வந்த பயணிகளின் 5 வயது குழந்தையின் கால் மீது வேகமாக வந்த கார் மோதியதில் ஆபத்தான நிலையில் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். எனவே, இப்பகுதியில் 3 வளைவுப் பகுதி உள்பட அடிக்கடி விபத்து நடைபெறக்கூடிய நான்கு இடங்க ளில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண் டனர்.
பகுதி நேர ரேசன் கடை அமைக்க கோரிக்கை
மேலும், திருமூர்த்திமலை செட்டில்மெண்டில் சுமார் 110 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்தியோதயா திட்டத்தில் அரிசி பெறும் கார்டுதாரர்கள் 81 பேர், ஓய்வூதியர்கள் 12 பேர் என மொத்தம் 93 கார்டுகள் உள்ளன. இவர்கள் அரிசி வாங்க மூன்றரை கிலோமீட்டர் தூரம் சென்று ஒரு கார்டுக்கு ரூ.50 வண்டி வாடகை கொடுத்து அரிசியை கொண்டு வர வேண்டியுள்ளது. எனவே மாதத்தில் இரு முறை இந்த ஊரில் நேரடியாக வந்து ரேசன் பொருட்கள் வழங்கினால் மக்க ளுக்கு சிரமம் குறைந்து உதவியாக இருக்கும். எனவே திரு மூர்த்திமலை செட்டில்மெண்டில் பகுதி நேர ரேசன் கடை செயல்பட ஆவன செய்யுமாறும் மலைவாழ் மக்கள் சார்பில் என்.மணிகண்டன் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித் தார்.
தரமற்ற முறையில் போடப்பட்டுள்ள தார்ச்சாலை எம்எல்ஏ செல்வராஜிடம் மக்கள் நேரில் புகார்
திருப்பூர், ஜூன் 13 – திருப்பூர், வெள்ளியங்காடு பகுதியில் தார் சாலை தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளது என்று தெற்கு தொகுதி எம்எல்ஏ க.செல்வராஜிடம் அப்பகுதி மக்கள் புகார் கூறினர். திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வ ராஜ் தனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி 52 ஆவது வார்டு வெள்ளியங்காடு பகுதியில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கை களை கேட்டறிந்தார். அவரிடம் பொதுமக்கள் தண்ணீர் பிரச் சனை தற்போது ஓரளவு சீர் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சாக்கடையை அடிக்கடி தூர்வார வேண்டும், தார்ச்சாலை தர மற்றதாக போடப்பட்டிருக்கிறது என்று கூறினர். உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை வரவழைத்த சட் டமன்ற உறுப்பினர் பொதுமக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யுமாறு கூறினார். மேலும் முதியோர் உதவித் தொகை, மாற்றத் திறனாளிகள் உதவித் தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என ஏராளமான பொதுமக்கள், சட்டமன்ற உறுப்பினரிடம் கோரினர்.
குமரன் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
திருப்பூர், ஜூன் 13 - திருப்பூர் குமரன் சாலையில் சாலையோர ஆக்கிரமிப்பு களை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினர் அப் புறப்படுத்தினர். திருப்பூர் குமரன் சாலையில் ஏராளமான வணிக நிறு வனங்கள் செயல்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெருக் கடி மிகுந்த சாலையாகவும் உள்ளது. இங்குள்ள வணிக நிறுவ னங்கள் சாலையை ஆக்கிரமித்து விளம்பரப் பலகைகளை வைத்திருப்பதால் கூடுதல் போக்குவரத்து சிக்கல் ஏற்படு கிறது. மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஏற்கனவே அவற்றை அப்புறப்படுத்த வணிக நிறுவனங்க ளுக்கு நோட்டீஸ் அனுப்பினர். காலக்கெடுவுக்குள் ஆக்கிர மிப்புகளை அகற்றாததன் காரணமாக செவ்வாயன்று மாநக ராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இணைந்து காவல்துறை பாதுகாப்புடன் சாலையோர ஆக்கிரமிப்பு களை அப்புறபடுத்தி பறிமுதல் செய்தனர். அப்போது வணிகர் கள் சிலர் மாநகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர்.
சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது
திருப்பூர், ஜூன் 13 - திருப்பூரில் 15 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட் டார். திருப்பூர் கொங்கு மெயின் ரோடு அருகே கொடிக்கம்பம் பகுதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி குடும்பத் துடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் ஜார்கண்ட் மாநிலத் தைச் சேர்ந்த சிகேந்திரகுமார் என்பவர் வசித்து வந்தார். இந் நிலையில் சிகேந்திரகுமார் பீகார் தொழிலாளியின் 15 வயது மகளிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்ததுடன், பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படு கிறது. இந்நிலையில் பாலியல் துன்புறுதலுக்கு ஆளான 15 வயது சிறுமி அளித்த புகாரின் பேரில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிகேந்திர குமாரை போலீசார் கைது செய்தனர். நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
தினக்கூலியை குறைத்து வழங்கிய ஊராட்சி நிர்வாகம்: கண்ணீர் விடும் தூய்மை காவலர்கள்
அவிநாசி, ஜூன் 13 – அவிநாசி அருகே தெக்கலூர் ஊராட்சியில் தினக்கூலியை குறைத்து வழங்கியதால், 15க்கும் மேற்பட்ட தூய்மை காவ லர்கள் வேதனை அடைந்துள்ளனர். அவிநாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெக்கலூர் ஊராட்சி யில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்ற னர். ஊராட்சி மன்றத்தில் பணியாற்றும் 18 தூய்மை காவலர் கள் வீடு வீடாக சென்று மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து திடக்கழிவு மேலாண்மைக்கு பயன்படுத்தி வருகின் றனர். இந்நிலையில், இந்த தூய்மை காவலர்களுக்கு வழங் கும் தினக்கூலியை ஊராட்சி நிர்வாகம் குறைத்து வழங்கி யது மட்டுமின்றி, மரியாதைக் குறைவாக நடத்துவதாகக் கூறி கண்ணீர் விட்டனர். இது குறித்து தெக்கலூர் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர்கள் கூறியதாவது, ஒரு நாளைக்கு ரூ.120 மட்டுமே தினக்கூலியாக தெக்கலூர் ஊராட்சியில் வழங்கி வந் தனர். தற்போது, மாத ஊதியத்தில் ரூ.500 முதல் ரூ.600 வரை குறைத்து வழங்கியுள்ளனர். மேலும், 15 நாட்கள் பணியாற்றிய ஒரு தூய்மை காவலருக்கு எவ்வித கூலியும் வழங்கவில்லை. ஊராட்சி நிர்வாகம் எங்களுக்கு உரிய மரியாதை கொடுப் பதில்லை. ஆகவே உரிய கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இது குறித்து அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் விஜ யகுமாரிடம் கேட்ட போது, தூய்மை காவலர்கள் பணி மிகவும் போற்றுதலுக்குரியது. தெக்கலூர் ஊராட்சியில் பணி யாற்றிய தூய்மை பணியாளர்களில் விடுப்பு எடுத்தவர்க ளுக்கு சம்பளம் குறைத்து வழங்கியுள்ளதாகக் கூறப்படுகி றது. உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றேன். மேலும் இந்த மாதம் முதல் ஊதியத்தை அதிகப்படுத்தி மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. ஆகவே, விரைவில் உரிய ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தருமபுரி: 10 ஏக்கரில் நெல் சேமிப்பு கிடங்கு
தருமபுரி, ஜூன் 13- தருமபுரி பகுதியில் 10 ஏக்கர் நிலப்பரப் பில் மேற்கூரை வசதியுடன் நெல் சேமிப்பு கிடங்கு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் பிரபாகர் தெரி வித்துள்ளார். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி, வெத்த லைக்காரன் பள்ளம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்த வெளி நெல் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் 7 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டை கள் மாயமாகி விட்டதாக புகார் எழுந்தது. தொடர்ந்து ஆய்வு செய்த ஆட்சியர் கி.சாந்தி மற்றும் அதிகாரிகள் அப்படி எதுவும் நடை பெற வாய்ப்பு இல்லை என்று கூறினர். தொடர்ந்து அரவை ஆலைகளுக்கு நெல் மூட் டைகள் அனுப்பும் பணி நடந்து வந்தது. இந் நிலையில், வெத்தலைக்காரன் பள்ளம் பகுதி யில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் சென்னை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண்மை இயக்குநர் பிர பாகர் திங்களன்று திடீர் ஆய்வு மேற்கொண் டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் இருப்பு குறைவு உள்ள தாக புகார் வந்ததை தொடர்ந்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. தொடர்ந்து கிடங்கில் உள்ள அனைத்து நெல் மூட்டைகளையும் உரிய விதிமுறைகளின்படி கண்காணித்து அரவை ஆலைகளுக்கு அனுப்பி அதனு டைய எடை மற்றும் மூட்டைகளின் எண் ணிக்கை கணக்கீடு செய்யப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் 80 அரவை ஆலைகள் அரவைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் அதற்கு தேவையான நெல் மூட்டைகள் டெல்டா மாவட்டங்களிலிருந்து ரயில் மார்க்கமாக கொண்டு வரப்படுகிறது. எனவே, நெல் சேமிப்பு கிடங்கு மேற்கூரை வசதியுடன் கட்ட சுமார் 10 ஏக்கர் அரசு புறம் போக்கு நிலம் கண்டறியப்பட்டுள்ளது. மேற் படி, நெல் சேமிப்பு கிடங்கு கட்டுவதற்காக மதிப்பீட்டு அறிக்கை மாவட்ட ஆட்சியர் மூலம் பெறப்பட்டு சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கு நட வடிக்கை எடுக்கப்படும், என்றார்.
மருதமலை அடிவாரத்தில் காட்டுயானைகள் முகாம்
கோவை, ஜூன் 13- கோவை மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டிய வனப்பகுதிகளில் காட்டுயானை, காட்டெருமை, கரடி, சிறுத்தை, மான் உள் ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. வன விலங்குகள் அவ்வப்போது, வனத்தை யொட்டிய மலை கிராமங்களில் நுழைந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப் படுத்தி வருகின்றன. கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆனைக்கட்டி வனப்பகுதியிலிருந்து கணுவாய் வழியாக மருதமலை அடிவாரத் திற்கு குட்டிகளுடன் 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வந்தன. தற்போது இந்த காட்டு ானைகள் யானைமடுவு பகுதியில் நின்று கொண்டிருக்கின்றன. இரவு நேரங்களில் ஐஓபி காலனி உள்ளிட்ட பகுதிகளில் யானை கள் வலம் வருகின்றன. மருதமலை அடிவார பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ள தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து விடாத வண்ணம் வனத்துறையினர் பாது காப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறையி னரும் அந்த யானைகள் ஊருக்குள் நுழைந்து விடாத வண்ணம், வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்னல் தாக்கி 2 மாடுகள் பலி
சேலம், ஜூன் 13- சேலம் மாவட்டம், எடப் பாடி ஒன்றியம், பக்கநாடு அருகே உள்ள எட்டிமரத் துக்காடு பகுதியைச் சேர்ந்த வர் பழனிசாமி (50). விவசா யியான இவர் விவசாய தோட் டத்தில் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நி லையில், திங்களன்று மாலை அப்பகுதியில் திடீரென இடி, மின்னலுடன் கனமழை பெய் தது. அப்போது பழனிசாமி யின் விவசாய தோட்டத்தில் கட்டி இருந்த 2 பசு மாடுகளை மின்னல் தாக்கியது. இதில் சுருண்டு விழுந்த பசுமாடு கள் அதே இடத்தில் பரிதாப மாக உயிரிழந்தன. இதுகு றித்து வருவாய்த்துறையி னர் மற்றும் கால்நடை துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.