உதகை, செப்.10- நீலகிரி மாவட்டம், எமரால்டு அணை பகுதியில் இரு புலிகள் உயிரிழந்ததற்கு விஷம் வைத்து கொல்லப்பட்டன என முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. மேலும், ஒரே மாதத்தில் 6 புலிகள் நீலகிரியில் உயிரிழந்த சம்பவம் வன விலங்கு ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 60 சத விகிதத்திற்கு மேல் வனப்பகுதி யாக உள்ளது. இந்த வனப்பகுதி களில் புலிகளின் எண்ணிக்கையும் அதிகமாக காணப்படுகிறது. குறிப் பாக முக்குருத்தி, போர்த்திமந்து, அவலாஞ்சி மற்றும் எமரால்டு வன பகுதிகளில் மரபணு குறைபாடு காரணமாக பிறந்துள்ள இரண்டு வெள்ளை புலிகள் உள்ளன. இந்நிலையில், எமரால்டு அணையின் கரையில் சனியன்று மாலை புலி ஒன்று இறந்து கிடப் பதை பொதுமக்கள் பார்த்து உதகை தெற்கு வனத்துறையி னருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து நீலகிரி வன கோட்ட வன அலுவலர் கௌதம் தலைமையில், உதகை தெற்கு வனச்சரக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அணை யில் தண்ணீரில் இறந்து கிடந்த புலியையும், அங்கிருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் இறந்து கிடந்த மற்றொரு புலியையும் கண்டு பிடித்து அதனை சோதனை செய் தனர். அதில் முதற்கட்டமாக இறந்து கிடந்த 2 புலிகளுக்கும் சுமார் 8 வயதிற்குள் இருக்கலாம் என்பதும், 2 புலிகளும் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு இறந்ததா? அல்லது விஷம் வைத்து கொல்லப்பட்டுள் ளனவா? என்ற கோணத்தில் வனத் துறையினர் விசாரணை மேற் கொண்டனர். இறந்த புலிகளின் உடல்களில் எந்த காயமும் ஏற் படாத நிலையில் புலிகள் இறப்ப தற்கு விஷம் வைக்கப்பட்டது
என முதற்கட்ட விசாரணையில் வனத்துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் புலிகள் இறந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தனிப்படை அமைத்து வனத்துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் 6 குழுக்களாக பிரிந்து புலி இறந்த இடத்தை சுற்றி மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வரு கின்றனர். புலிகள் இறந்த இடத் திற்கு அருகாமையில் மாடு ஒன்று இறந்திருப்பதையும் தற்பொழுது மோப்பநாய் உதவியுடன் வனத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அடையாளம் தெரியாத நபர்கள் இறந்த மாட்டில் விஷம் கலந்ததால் அதனை புலி சாப்பிட்டு இருந் திருக்கக் கூடும் என வனத்துறை யினர் சந்தேகிக்கின்றனர். இதனி டையே இறந்த புலிகளின் உடல் களை 5 கால்நடை மருத்துவர் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் பாகங்கள் ஆய்விற்காக அனுப்பும் நடவடிக் கையும் வனத்துறை சார்பில் எடுக் கப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கை வந்தவுடன் முழுமையான தகவல் தெரியவரும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எமரால்டு பகுதியில் இரண்டு புலி கள் இறந்துள்ள சம்பவம் வன விலங்கு ஆர்வலர்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்திவுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 6 புலிகள் இறந்த சம்பவம் வன விலங்கு ஆர்வலர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.