districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஆயத்த ஆடை ஏற்றுமதி 14 சதவீதம் வளர்ச்சி

திருப்பூர், ஆக. 16 - ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தென்னிந்தியப் பொறுப்பாளர் டாக்டர் ஆ.சக்திவேல் வெள்ளியன்று கூறியதாவது, ஜூலை மாதத்தில் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூபாய் மதிப்பில் 13.8 சதவிகித வளர்ச்சி அடைந்திருக்கிறது. இது கடந்த வருட ஜூலை மாதத் தோடு ஒப்பிடும் பொழுது ரூபாய் மதிப்பில் சுமார் 1,400 கோடி உயர்வு ஆகும். ஆக மொத்தம் ஜூலை மாத ஏற்றுமதி ரூபாய் 10,677 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல் கடந்த 4 மாதங்களுக்கான (ஏப்ரல்-ஜூலை) மொத்த ஏற்றுமதி 5.13 பில்லியன் டாலராக உள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 42,800 கோடியாகும். இது சராசரியாக 7.6% வளர்ச்சி யாகும். இதன் மூலம் திருப்பூரின் ஏற்றுமதி சுமார் ரூ.400 கோடி அளவுக்கு கடந்த ஜூலை மாதத்தில் உயர்ந்துள்ளதை காண முடிகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்தி ரேலியா, கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுக ளுக்கான நமது ஏற்றுமதி உயர்ந்து உள்ளதை காண முடிகி றது. இதன் மூலம் இந்நாடுகளின் நுகர்வு அதிகரித்திருப்பது தெரிகிறது. வரும் காலங்களில் இது நமது இந்திய மற்றும் திருப்பூரின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு மேலும் வலு சேர்க்கும். இதன் மூலம் கண்டிப்பாக நமது ஏற்றுமதி மேலும் வளர்ச்சி அடையும் என தெரிவித்துள்ளார். 

சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி மறியல்

சேலம், ஆக.16- குண்டும், குழியுமான சாலையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாநகராட்சி, 24 ஆவது வார் டுக்குட்பட்ட பிள்ளையார் நகர் பகுதியி லுள்ள சிமெண்ட் குடோன் சாலையில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக் கும் இப்பகுதியில், சிமெண்ட் குடோன் உள்ளிட்ட குடோன்கள் அதிகளவில் உள்ளது. இதனால் கனரக வாகனங்கள் அடிக்கடி இச்சாலை வழியாக செல்வ தால் சாலை முற்றிலும் பழுதடைந்து காணப்படுகிறது. கடந்த 15 ஆண்டுக ளுக்கு முன்பாக போடப்பட்ட சாலையை தற்போது சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மனுவாக வும், மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரி வித்தும் வந்த நிலையில், இதுவரை மாந கராட்சி நிர்வாகம் சாலையை சீர் செய்யவில்லை. இதனால் ஆவேசம டைந்த பொதுமக்கள் மூலப்பிள்ளை யார் கோவில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவலறிந்து வந்த அன்ன தானப்பட்டி காவல் துறையினர் போராட் டக்காரர்களிடம் பேச்சுவார்தை நடத்தி  அனைவரையும் கலைந்து போகச் செய்தனர்.

சாலையின் நடுவே ஆபத்தான பள்ளத்தை  மூடி சரி செய்த காவலர்களுக்கு பாராட்டு

திருப்பூர், ஆக. 16 - திருப்பூர் அருகே சாலையின் நடுவில் விபத்தை ஏற்படுத் தக்கூடிய ஆபத்தான பள்ளம் இருந்ததை உரிய நேரத்தில் கவ னித்து அதை மூடிய காவலர்களுக்கு மாநகர காவல் ஆணை யர் லட்சுமி பாராட்டுத் தெரிவித்தார். திருப்பூர் மாநகரம்,  அம்மாபாளையம் சந்திப்பு சாலை யின் நடுவில் தண்ணீர் குழாய் அமைக்க தோண்டி மூடப்பட்டக்  குழி, மழையின் காரணமாக மீண்டும் பள்ளமாக மாறியி ருந்தது. இதனால், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள்  அவதியுற்றனர். இதைப் பார்த்த நுண்ணறிவு பிரிவு காவலர்   கார்த்திகேயன், திருமுருகன் பூண்டி காவல் நிலைய எழுத்தர்  கண்ணன் மற்றும் பூண்டி காவல் நிலைய காவலர் ஆனந்தன்  மற்ற காவலர்களுடன் இணைந்து பள்ளத்தை மூட முயற்சித் தார்.   பின்னர், அருகில் இருந்த தனியார் ஜேசிபி இயந்திர  உரிமையாளரை அணுகினார். அப்போது அந்த இயந்தி ரத்தை  இயக்க ஆட்கள் இல்லை என்று கூறியதால், காவலர்  ஆனந்தன் தாமாகவே  அந்த வாகனத்தை இயக்கி அப்பள் ளத்தை  மூடி சரி செய்தார். இப்பணியைச் செய்த காவலர்க ளின் நல்லெண்ண செயலை   மாநகர காவல் ஆணையர் லட்சுமி  பாராட்டி, காவலர்கள் மூவரையும் நேரில் அழைத்து  வெகுமதி  அளித்து ஊக்கப்படுத்தினார்.

ரேஷன் அரிசி கடத்தல் 

திருப்பூர், ஆக.16 - திருப்பூர், ஊத்துக்குளி அடுத்த மொரட்டுப்பாளையம் பகு தியில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை  போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது அந்த ரோட்டில் வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.  அப்போது 420 கிலோ ரேசன் அரிசியை ஆட்டோவில் கடத்தி  வந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் அவர் திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த ரமேஷ் (46) என்பதும்,  அவர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பொது மக்களிடம் குறைந்த  விலைக்கு ரேசன் அரிசிகளை வாங்கி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மற்றவர்களுக்கு விற்பனை  செய்ய கொண்டு  வந்திருக்கிறார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேசை கைது செய்து, ரேசன் அரிசி மற்றும்  ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

குழியில் தவறி விழுந்து இறந்தவருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஆக. 16 - திருப்பூரில் நான்காவது குடிநீர் திட்ட குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி யில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய் யப்படாததால் முதியவர் ஒருவர் அதில்  தடுமாறி  விழுந்து மரணமடைந்தார். இந்த சம்பவத்தில் மரணமடைந்தவரின் மனைவிக்கு ரூபாய் 15 லட்சம் இழப் பீடு வழங்க ஒப்பந்ததாரருக்கு சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் கோயில் வழி பகுதியில் குடியிருந்தவர் ஜார்ஜ். இவர் தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக வேலை செய்து வந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி, வேலைக்குச் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தபோது கோயில்வழி முத் தனம்பாளையம் சாலையில் நான்கா வது குடிநீர் திட்ட குழாய் பதிக்க தோண் டப்பட்ட பாதுகாப்பற்ற குழியில் தடு மாறி விழுந்து விட்டார். அந்த குழிக் குள் இருந்த கான்கிரீட் கம்பி குத்தி சம் பவ இடத்திலேயே உயிரிழந்தார். குடிநீர் திட்ட குழாய் பதிக்க தோண் டப்பட்ட குழி பாதுகாப்பின்றி விடப்பட்ட தால் தான் ஜார்ஜ் விபத்தில் சிக்கி உயிர்  இழக்க நேரிட்டது. எனவே அவரது மறை வுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்  என்று ஜார்ஜின் மனைவி ராஜேஸ்வரி மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையர்,  குடிநீர் குழாய் திட்டப் பணியை மேற் கொண்ட ஒப்பந்ததாரர் ஆகியோருக்கு மனு செய்தார். இரண்டு ஆண்டு காலம் ஆகியும் இழப்பீடு பெற முடியாத நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில், இழப் பீடு வழங்க உத்தரவிடக் கோரி ரிட் மனு  தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் ஆகஸ்ட் 16 ஆம்  தேதி (வெள்ளிக்கிழமை) தீர்ப்பளித் தார். இதில் மனுதாரர் ராஜேஸ்வரிக்கு,  ஒப்பந்ததாரர், ரூ. 15 லட்சம் இழப்பீட்டை  ஆறு வார காலத்தில் வழங்க வேண்டும்  என்று உத்தரவிட்டார். இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.பி.குணஶ்ரீ ஆஜராகி வாதிட்டார்.

மக்காளச்சோள விவசாயிகளுக்கு ஆலோசணை

உடுமலை, ஆக.16 -  தென்மேற்கு பருவ மழை பெய்த  நிலையில், அடுத்த வாரம் திருமூர்த்தி  அணையில் இருந்து இரண்டாம் மண்ட லப் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கபட உள்ளது. எனவே உடுமலை வேளாண் துறை சார்பில் மக்காச் சோளம் பயிர்  செய்யும் விவசாயிகளுக்கு ஆலோச ணைகள் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்துறையினர் கூறியிருப்பதாவது, திருமூர்த்தி அணை யில் இருந்து வரும் 19 ஆம் தேதி  இரண் டாம் மண்டலப்  பாசன நீர் திறக்கப்பட  வுள்ளது. இதுகுறித்து மக்காச்சோளம்  சாகுபடி செய்ய உத்தேசித்துள்ள விவ சாயிகளுக்கு, ஆலோசனைகள் வழங் கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக  மக்காச்சோளம் சாகுபடியில் பெரும்  பிரச்சனையாக இருப்பது அமெரிக்கன்  படைப்புழு தாக்குதல். இதனால், மக சூழ் இழப்பு ஏற்படுவதோடு மட்டுமல் லாது, ரசாயன மருந்தின் விலை ஏற்றத் தால் பொருட் செலவும் அதிகம்  ஏற்படுகிறது. மேலும் தீவனமும் விஷ மாகிறது. இதை கட்டுப்படுத்த, மக்காச் சோள சாகுபடிக்கு முன் ஒரு ஏக்க ருக்கு 100 கிலோ நல்ல வேப்பம் புண் ணாக்கும், கடைசி உழவின் போது விளைநிலத்தில் போட்டு உழவு செய்ய வேண்டும்.  இதனால் படைப்புழுவின் கூட்டுப்புழுக்கள் அழிக்கப்பட்டும், அதன் பெருக்கம் கட்டுப்படுத்தப் படும்.  மக்காச்சோளம் விதை விதைத்தவு டன் வயல் வரப்பு ஓரங்களில் வயலைச் சுற்றியும் பயறு வாகை பயிர்களான தட் டைப்பயறு, உளுந்து, பாசிபயறு, மொச்சை ஆகியவற்றில் ஒன்றை பொறிப்பயிராக நடவு செய்ய வேண் டும். இதனால் படப்புழுக்களின் தக்கு தலை நாம் முன்கூட்டியே கட்டுப்ப டுத்தப்படும். மக்காச்சோளம் வளர் நிலையில் இளம் பயிராக இருக்கும் போது ஒரு வேலை படைப்புழு தாக்குதல் தென் பட்டால் நிம்பிசிடின் என்ற வேப்ப எண்ணை மருந்தை ஒரு டேங்கிற்க்க  40-50 மில்லி கலந்து தெளித்தால் படைப்புழு கட்டுப்படும் இது பயிரின் வயது 15-20 நாட்களுக்குள் இருக்கும் போது நன்கு கட்டுப்படுத்தும். மேலும் பயிர் 20 நாட்களுக்கு மேல்  இருக்கும்பொழுது படைப்புழு தாக்கு தல் தென்பட்டால் வேளாண்மைத்துறை யில் மானிய விலையில் விற்கப்படும் மெட்டாரைசியம் அனிசோபில் என்ற எதிர் உயிர் பூச்சிக்கொல்லியை ஒரு  டேங்கிற்க்கு 100 கிராம் கலந்து நன்கு  குருத்தில் இறங்கும் வன்னம் கைத்தெ ளிப்பான் அல்லது பேட்டரி தெளிப்பான்  கொண்டு தெளித்தால்  கட்டுப்படுத்த லாம். இந்த மருத்தின் விலை ரூ.135/ கிலோ இதில் 50% மானியம் வழங்கப் படும். மேற்கண்ட அனைத்துமுறைகளை யும்  கடைபிடித்தால் படைப்புழுவின்  தாக்குதலில் இருந்து மக்காச்சோளப்ப யிரை  காப்பாற்றி அதிக மகசூழ் எடுக் கலாம். என தெரிவித்துள்ளனர்.

சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்

நாமக்கல், ஆக.16- 78 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில் பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சி துவக்கப் பள்ளிகள், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் 78 ஆவது சுதந்திர தின விழா நிகழ்ச்சி புதனன்று நடைபெற்றது. இதில் பள்ளிபாளையம் நகர்மன்றத் தலை வர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன், நகராட்சி ஆணையர் தாமரை உட்பட பலர் கலந்து கொண்டனர். குமார பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச் சிக்கு, நகராட்சி ஆணையர் குமரன் தலைமை வகித்தார். சுகாதார அலுவலர் ராமமூர்த்தி வரவேற்றார். நகர்மன்றத் தலைவர் விஜய் கண்ணன் மூவர்ண கொடியை ஏற்றி வைத் தார். இதைத்தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த தூய்மைப் பணி யாளர்களுக்கு, சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டு  தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நகர்மன்ற துணைத்தலை வர் வெங்கடேசன், நகரமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து  காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இவ்விழாவில் விடுதலைப் போராட்டத்தில் பங் கேற்ற வீரர்களின் குடும்பத்தினர் கௌரவிக்கப்பட்டனர். இதே போல் சேலம் மாநகராட்சி அலுவலகம், ரயில்வே கோட்டம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பாக  சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

பெண் பயிற்சி மருத்துவரிடம் அத்துமீறல்

கோவை, ஆக.16- கோவை அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவரிடம் அத்துமீறலில் ஈடுபட்ட வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், புதனன்று பணி முடிந்து பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் வாகன நிற்கும் இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனது இரு சக்கர வாகனத்தை எடுக்கச் சென்றார். அப்பொழுது அங்கு  வந்த வட மாநில வாலிபர் ஒருவர் திடீரென பயிற்சி பெண் மருத் துவர் மீது பாய்ந்து தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்தவர் அந்த வாலிபரை தள்ளிவிட்டு கூச்ச லிட்டார். சத்தம் கேட்டு காவலாளி ஓடி வந்தார். உடனே அந்த  வாலிபர் தப்பி ஓடினார். இது பற்றி சக பயிற்சி மருத்துவர் களிடம், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் தெரிவித்துள் ளார்.  இதற்கிடையில் நள்ளிரவில் ஒரு மணி அளவில் அதே வாலிபர் சிறிய காயத்துடன் சிகிச்சைக்காக மீண்டும் மருத்துவ மனைக்கு வந்தார். அவரை அடையாளம் கண்டு கொண்ட  பயிற்சி மருத்துவர்கள் மடக்கி பிடித்து பந்தய சாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் காவல் துறை நடத் திய விசாரணையில் அவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மயான்க் கலார் என்பது தெரிய வந்தது. மேலும் அவருடன் கோவைக்கு வந்தவர்கள் ரயில் நிலையத்தில் தனியாக விட்டு, விட்டு சென்றதும், இதனால் அவர் அங்கே மூன்று நாட்கள் சுற்றித் திரிந்ததும் தெரியவந்துள்ளது. சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருக்கும் அந்த வாலிபரை காவல்  துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

சட்டவிரோதமாக மாத்திரை விற்பனை

கோவை, ஆக.16- சின்னியம்பாளையம் அருகே சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்தி ருந்த 160 வலி நிவாரணி மாத் திரைகளை போலீசார் பறி முதல் செய்தனர். இதுகுறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறுகை யில், வலி நிவாரண மாத்தி ரைகளை சட்டவிரோதமாக பெற்று, போதை ஏற்றுவதற் காக மாணவர்களிடம் விற் பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து நடைபெற்ற சோதனையில்,  தருமபுரி மாவட்டம், கருப்பம் பட்டியைச் சேர்ந்த கோகுல், கோவை, கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக் குளத்தைச் சேர்ந்த மௌலீஸ் வரன் இச்செயலை செய்தது  தெரியவந்தது. கோகுல் சூலூரில் உள்ள ஒரு தனி யார் கல்லூரியில் இளங் கலை இறுதியாண்டு படித்து, கல்லூரி விடுதியில் தங்கி  வருகிறார். அதே கல்லூரி யில் மௌளீஸ்வரன் பிகாம்  இரண்டாம் ஆண்டு படித்து  வந்தார். இருவரையும் பீள மேடு காவல் துறையினர் கைது செய்து, 160 மாத்திரை களை பறிமுதல் செய்தனர்.

191 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

கோவை, ஆக. 16- சுதந்திர தினத்தன்று விடு முறை அளிக்காத 191 நிறுவ னங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய விடுமுறை தின மான சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடு முறை அளிக்கப்பட்டு உள் ்ளதா? என்று கோவை மாவட் டத்திற்கு உட்பட்ட கடைகள் தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற் றும் மோட்டார் போக்குவ ரத்து நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட் டது. மொத்தம் 230 நிறுவனங் களில் இந்த ஆய்வு நடை பெற்றது. இந்த ஆய்வில் சுதந் திர தினத்தன்று தொழிலா ளர்களுக்கு விடுமுறை அளிக் காமல் இயங்கிய 92 கடைகள், 99 உணவு நிறுவனங்கள் உட்பட மொத் தம் 191 நிறுவன உரிமையா ளர்கள் மற்றும் பொறுப்பா ளர்கள் மீது சட்ட பூர்வ நடவ டிக்கை எடுக்க உத்தரவிடப் பட்டு உள்ளது.