கும்பகோணம், ஜன.27- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வண்ணாங்கண்ணி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வெற்றிவேல் முருகன் ஆலயத்தில் வியாழனன்று தைப்பூச திருவிழா நடைபெற்றது.
இதில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில், இஸ்லாமிய பெண்கள் முருகனை வழிபட்டனர். மதரீதியாக பொய்ச் பிரச்சாரங்களை நடத்தி தமிழ்நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியை, இந்நிகழ்வு முறியடித்து, மதநல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கு உதாரணமாக உள்ளது என இதைப் பார்த்த பலரும் தெரிவித்தனர்.