districts

img

வண்டல் மண் எடுக்க வட்டாட்சியர் அளவில் அனுமதி

காஞ்சிபுரம், ஜூன்28 – ஏரிகளில் விவசாயிகள் வண்டல் மண்ணெடுக்க, வட்டாட்சியர் அளவி லேயே அனுமதி வழங்கப்படு வதால் தாமதம் இனி ஏற்படாது என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

வெள்ளியன்று  காஞ்சி புரத்தில் நடைபெற்ற விவ சாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு வேளாண் சார்பு நிறுவனங்கள் சார்பில் கண்காட்சி நடத்தப் பட்டது. இதில் பாரம்பரிய நெல் வகைகள், தோட்டக் கலை பயிர்கள் குறித்த விளக்கங்கள் அளிக்கப் பட்டது.

விவசாயிகளுக்கு முத லமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின்கீழ் 15 விவ சாய பயனாளிகளுக்கு (தக்கைப்பூண்டு விதை மற்றும் ஆடாதொடா, நொச்சி) வேளாண்  பயிர் செடிகள் மற்றும் பசுந்தாள் உர விதைகள் உள்ளிட்ட வேளாண் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் கூட்டுறவு சங்கம் மூலம் 19 விவசாயிகளுக்கு சுமார் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் பயிர் கடன்களும், தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர் கள் துறை சார்பில் 3 விவ சாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கான பணி ஆணை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

விவசாயிகள் கோரிக்கை

விவசாயிகள் கரும்பு பயிரிட அதிக அளவில் உற்பத்தி செலவு ஆவ தாகவும், ஆனால் அதன் பயனோ மிக குறை வாக உள்ளது எனவும் கொள்முதல் விலையை அதிகரிக்க அரசு முன்வர வேண்டும் என  கேட்டுக்கொண்டனர். மேலும் எண்ணெய் வித்துக்கள் பயிரிட அரசு நிலங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய ஆட்சியர் கலைச் செல்வி, விவசாயிகள் ஏரி களில் மணல் எடுக்க வட்டாட்சியர் அளவிலேயே தற்போது அனுமதி அளிக்கப்படுவதால், அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், ஏரிகள் இல்லாத பகுதிகளில் அங்குள்ள குளங்களில் உள்ள வண்டல் மண்ணை பயன்படுத்திக் கொள்ள லாம் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கூட்டு றவுத் துறை சார்பில் வங்கிக் கடன்கள், வேளாண் துறை சார்பில் இடுபொருட்கள் மற்றும் அரசியல் திட்டத்தின் கீழ் மரகன்றுகள் வழங்கப்பட்டது.