districts

img

கள்ளக்குறிச்சி காலை உணவுத்திட்டத்தில் 47ஆயிரம் மாணவர்கள் பயன்

கள்ளக்குறிச்சி, ஜுன் 28- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச் சரின் காலை உணவுத் திட்டம் 667 பள்ளிகளில்  செயல்படுத்தப்பட்டு 47,303 மாணவர்கள் பயனடைந்து  வருவதாக மாவட்ட ஆட்சியர்  பிரசாந்த் தகவல் தெரிவித்தார்.

 கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம். பொய்க்குணம் ஊராட்சி  ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச் சரின் காலை உணவுத் திட்டத்தினை மாவட்ட  ஆட்சியர் பிரசாந்த் வியாழனன்று நேரில் பார்வையிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், 1 முதல் 5 ம்  வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி  மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.

பொய்க்குணம் ஊராட்சி ஒன்றிய  தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பார்வையிடப் பட்டது. இதில் குழந்தைகளுக்கு சமைக்கப் படும் உணவின் தரத்தினை சுவைத்து பார்க்கப்பட்டது. மேலும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் குறித்த விவரங்கள் அடங்கிய பொருட்கள் இருப்பு பதிவேடும் பார்வையிடப்பட்டது.

மேலும் இத்திட்டத்தின் கீழ் திங்களன்று ரவா உப்புமா,  செவ்வாயன்று காய்கறி  சேமியா கிச்சடி, புதனன்று வெண்பொங் கல், வியாழனன்று அரிசி உப்புமா, வெள்ளியன்று கோதுமை ரவா கிச்சடி இவையனைத்தும் காய்கறிசாம்பாருடன் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் முதற்கட்டமாக ஊரக பகுதிகளில் 14 பள்ளிகளிலும், இரண்டாம் கட்டமாக ஊரக பகுதிகளில் 609 பள்ளிகளிலும்,  பேரூ ராட்சி ஊரக  பகுதிகளில் 29 பள்ளிகளிலும்,  நகராட்சி பகுதிகளில் 15 பள்ளிகளிலும் என  மொத்தம் 667 பள்ளிகளில் முதலமைச் சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத் தப்பட்டு வருகிறது. இதன் மூலம் இப்பள்ளிகளில் பயிலும் 47ஆயிரத்து 303 மாணவர்கள்  பயன் பெற்று வருகின்றனர் என ஆட்சியர் தெரிவித்தார்.