districts

img

ஜெயங்கொண்டம் பேரூராட்சியில் சிபிஎம் கவுன்சிலர் தலைமையில் முற்றுகை

கரூர், ஜூலை 27 - கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றி யம், பழைய ஜெயங்கொண்டம் பேரூ ராட்சிக்குட்பட்ட 10 ஆவது வார்டு கவுன்சில ராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தேவி நாகராஜன் இருந்து வரு கிறார். 

இவரது 10 ஆவது வார்டில் ஆயிரத்திற் கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரு கின்றனர். இவர்களுக்கு தேவையான அடிப் படை வசதிகளான குடிநீர், சாலை வசதி, தெரு  விளக்கு, விளையாட்டு மைதானம், பொதுக்  கழிப்பிடம், நாடக மேடை, சாக்கடை கால்வாய், பூங்கா உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதி களைக் கேட்டு கோரிக்கைகளாக பேரூராட்சி  கவுன்சிலர்  தேவி நாகராஜன், பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனுவை அளித் தார்.

மனு அளித்து, இரண்டரை ஆண்டு களான நிலையில், கோரிக்கை குறித்து பேரூ ராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வில்லை. நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டு, மக்களுக்கு அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை. 

இதனை கண்டித்தும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பழைய ஜெயங்கொண்டம் கிளை, இந்திய ஜனநா யக வாலிபர் சங்கம், விடு தலை சிறுத்தைகள் கட்சி, பெரியார் அம்பேத் கார் இயக்கம் உள்ளிட்ட  அமைப்புகள், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கிருஷ்ணராயபுரம் ஒன்றியக் குழு  உறுப்பினர் வி.நாகராஜன் தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தை தொடர்ந்து பேரூராட்சித் தலைவர் செளந்தரப் பிரியா மோகன்ராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. இலாலாப்பேட்டை காவல் ஆய்வா ளர் ஸ்ரீதர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  கிருஷ்ணராயபுரம் ஒன்றியச் செயலாளர் ஜி.தர்மலிங்கம், பேரூராட்சி 10 ஆவது வார்டு  கவுன்சிலர் தேவி நாகராஜன், விடுதலை சிறுத் தைகள்  கட்சியின் சார்பில் மகாமுனி, முருகேசன்  ஆகியோர் கலந்து கொண்டனர். 

பேச்சுவார்த்தையில், “10 கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும் என்று தெரி விக்கப்பட்டது. பின்பு, பத்து கோரிக்கைக ளில் நான்கு கோரிக்கைகள் மீது உடன டியாக பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றிட உறுதி அளித்தனர். மீதம் உள்ள  கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என முடிவு செய்யப்பட்டது.