உதகை, ஜூலை 25- மின் தடையால் பார்சன்ஸ் வேலி குடி நீர் விநியோகம் தடைப்பட்டதால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளன.
நீலகிரி மாவட்டம், உதகை நகராட் சியில், 18 வார்டுகளுக்கு பார்சன்ஸ் வேலி குடிநீர் ஆதாரமாக உள்ளது. இப் பகுதியில், உள்ள 60 அடி கொண்ட பார் சன்ஸ்வேலி நீராதாரத்தில் கடந்த சில நாட்கள் பெய்த மழைக்கு, 45 அடி வரை தண்ணீர் இருப்பில் உள்ளது. தொடர்ந்து, வீசிய சூறாவளி காற்றுக்கு பார்சன்ஸ் வேலி நீரேற்று நிலையத்தின் மின் பாதையில் மரங்கள் விழுந்து மின் தடை ஏற்பட்டது. நீரேற்று நிலையத்தி லிருந்து குடிநீரை தொட்டியில் தண் ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட் டது. மேலும், வார்டுகளுக்கு குடிநீர் விநி யோகத்தில் தடை ஏற்பட்டது.
கடந்த நான்கு நாட்களாக குடிநீர் வராததால் வார்டு பொதுமக்கள் பாதிக் கப்பட்ட நிலையில், சிலர் தனியார் மூலம் அதிக கட்டணம் கொடுத்து லாரிகள் மூலம் தண்ணீர் வாங்கினார். குறிப் பாக, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக் கப்பட்டனர்.
இதுகுறித்து, நகராட்சி அணையர் ஏகராஜ் கூறுகையில், அடர்ந்த வனப்ப குதிக்கு இடையே பார்சன்ஸ் வேலி நீரேற்று நிலையம் இருப்பதால் பருவ மழை சமயத்தில் மின் தடை பிரச்னை வருகிறது. பலத்த சூறாவளி காற்றுக்கு நீரேற்று நிலைய மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்து மின் தடை ஏற்பட்ட தால், குடிநீர் வினியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்க ளுடன் நகராட்சி ஊழியர்களும் சீர மைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓரிரு நாளில் சீராகிவிடும். என்றார்
அடர்ந்த வனப்பகுதிக்கு இடையே நீரேற்று நிலையம் உள்ளது. பருவ மழை மற்றும் பலத்த காற்று வீசும் சமயங்க ளில் மின்தடை ஏற்பட்டு குடிநீர் விநியோ கம் தடைப்படுகிறது. இதற்கு, நிரந்தர தீர்வு காணும் வகையில் காட்டு குப்பை யில் இருந்து பார்சன்ஸ் வேலி வரை 4 கி.மீ, தூரத்திற்கு மின் கேபிள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வனத் துறை ஆட்சேபனையால் இத்திட்டம் கடந்த பல ஆண்டுகளாக கிடப்பில் உள் ளது. இத்திட்டம் புத்துயிர் பெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும். என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.