உதகை, மே 15- உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் திர ளானனோர் குவிந்த நிலையில், கொரோனா கட்டுப்பாட்டு விதி முறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். நீலகிரி மாவட்டம், குன்னூர் அரசு மருத்துவமனையில் தனியார் அறக்கட்டளையின் சார்பில் ரூ.80 லட்சம் மதிப்பில் புற நோயாளிகள் பிரிவு அதிநவீனமாக புனரமைக் கப்பட்டது. இதற்கான திறப்பு விழா தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதன் பின் அரசு மருத்துவமனையில் அனைத்து வார்டுகளிலும் ஆய்வு கள் மேற்கொண்டார். இதில், தன் னார்வ அமைப்பினர் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். இந் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜெ.ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, உதகை மலர் கண் காட்சியின் போது சுற்றுலா பயணி கள் அதிகளவில் வருகை தருகின்ற னர். சுற்றுலா பயணிகள் தங்களின் சுய பாதுகாப்பை கட்டாயம் பின் பற்ற வேண்டும். 20 பேருக்கு மேல் கூடும் இடங்களில் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து கொள்வது உள் ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறை களை பின்பற்றுவது அவசியமா கும். தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் தனிமனித இடை வெளியை கட்டாயம் பின்பற்ற வேண் டும், என்றார். மேலும், பழங்குடியினருக்கு வரும் சிக்கில் செல் அனீமியா கட் டுப்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற மரபுவழி வரும் நோய்கள் குறித்து அவர்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தக்காளி வைரஸ் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். யாருக்காவது உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து கொள்ள வேண்டும், என்றார்.