districts

img

அமராவதி அணை சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

உடுமலை, ஜூலை 18- திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை யில் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வரும்  நிலையில், அமராவதி ஆற்று கரையோரப் பகுதிகளுக்கு  வெள்ள அபயா எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அணையில் இருந்து 3000 கன அடி தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளது.

தமிழக கேரள எல்லையான மறையூர், கோவில் கதவு, காந்தளூர் உள்ளிட்ட பகுதி களில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்ததால் தேனாறு, பாலாறு, சின்னாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது. மேலும், உடுமலை மற்றும் மடத்துக் குளம் பகுதிகளில் பருவமழை தீவிரமாக பெய்து வருவதால், இப்பகுதியில் உள்ள திரு மூர்த்தி அணை மற்றும் அமராவதி அணை யின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகி றது. 

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வியாழனன்று அமராவதி ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்கள் பாதுக்காப்பாக இருக்க வேண்டும் என்றும்,  அணை வேகமாக நிரம்பி வருவதால் அணை யின் பாதுகாப்பு கருதி எந்த நேரத்திலும் திறக் கப்படாலாம் என அறிக்கை வெளியிட்டுள் ளார். அமராவதி அணையின் மொத்த கொள் ளளவு 90 அடியில் தற்போது 86.02 அடி நீர்  உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6344 கன  அடி நீர்வரத்து உள்ளது. இது குறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறிகையில், அம ராவதி அணைக்கு வரும் தண்ணீர் அளவு குறித்து தொடர்ச்சியாக கண்காணித்து வருகி றோம். அணையின் நீர்மட்டம் 88 அடியாக உய ரும்போது அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப் படும் என்றார். இந்நிலையில் வியாழனன்று மாலை 3000 கன அடி தண்ணீர் திறந்துவி டப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை பயிற்சி:

தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால், இயற்கை பேரிடர் களில் இருந்து பொதுமக்களை காப்பாற்றும்  வகையில் தீயணைப்பு துறையினர் வியா ழனன்று திருமூர்த்தி மலையில் ஒத்திகை பயிற்சி நடத்தினார்கள். மேலும், இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இப்பகுதியில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து  வருகிறது. எனவே திருமூர்த்தி மலை அடி வாரம், அமணலிங்கேஸ்வரர் கோவில் பகுதி யில் வரும் பாலாற்றில் வெள்ளம் மற்றும் தண் ணீரில் பொதுமக்கள் அடித்து செல்லப்பட் டால், அவர்களை காப்பாற்றுவது குறித்து ஒத்திகை பயிற்சி எடுக்கப்பட்டது. எந்து சூழ் நிலையிலும் பொது மக்களை காப்பாற்றும் வகையில் 24 மணி நேரமும் விழிப்புடன் இருப் போம் என்றனர்.

மழை நீரில் மூழ்கிய பாலம்:

திருப்பூர் அடுத்த மங்கலம் அருகே நொய் யல் ஆற்றில் நல்லம்மன் தடுப்பனை உள் ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மங்கலம் அருகே உள்ள நல்லம்மன் தடுப்பணையில் வெள் ளம் ஏற்பட்டு, அணைக்கு நடுவே உள்ள கோவிலுக்கு செல்லும் சிறு பாலம் ஆற்று  நீரில் மூழ்கி விட்டது. வெள்ளம் காரணமாக,  நல்லம்மன் கோவிலுக்கு பொதுமக்கள் செல் வதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். அதேபோல சாமளாபுரம் குளத்திலும் நீர்வ ரத்து அதிகரித்துள்ளது. திருப்பூர் மாநகரில் கல்லூரி சாலை, மங்கலம் சாலைகளை இணைக்கும் அணைப்பாளையம் தரைப் பாலம், ஈஸ்வரன் கோவில் அருகில் உள்ள நொய்யல் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது.