court

img

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை!

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டுவசதி வாரிய முறைகேடு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது உச்சநீதிமன்றம்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நிகழ்ந்ததாகக் கூறப்படும் வழக்கில், அமைச்சர் ஐ. பெரியசாமியை குற்றமற்றவர் என கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆனால், கடந்த பிப்ரவரி மாதம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.  கீழமை நீதிமன்றங்களின் விசாரணை உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. 3 மாதத்திற்குள் இந்த வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்திருந்தார். உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ. பெரியசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கீழமை நீதிமன்றத்தில் விசாரணையை நடத்தத் தடை வித்து உத்தரவிட்டது.