மதுரை:
தமிழகத்தில் இரண்டாயிரம் மினி கிளினிக்குகளுக்கு தேர்வு செய்யப்படும் மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் ஏஜென்சிமூலம் தேர்வுசெய்ய வெளியிட்ட அறிக்கையை ரத்து செய்யக் கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மதுரை வளர்நகர் பகுதியைச் சேர்ந்த வைரம் சந்தோஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “தமிழ்நாட்டில் 2000 மினி கிளினிக் தொடங்குவதற்கான அரசாணை 2020டிசம்பர் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் பணிபுரியும் செவிலியருக்கு சம்பளமாக ரூ.14,000, மருத்துவ உதவியாளர்களுக்கு ரூ.6,000 வழங்கப் படுவதாக உள்ளது. இந்த கிளினிக்குகளுக்காக 585 மருத்துவ உதவியாளர்கள், 1,415 செவிலியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். இதற்காக சுகாதாரத்துறை இயக்குநர் 2020 டிசம்பர் 15-ஆம் தேதி பணியாளர் நியமனம் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதன்படி தனியார் ஏஜென்சி மூலம் பணியாளர் கள் தேர்வு செய்யப்படஉள்ளனர். மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் ஏஜென்சி மூலம் தேர்வு செய்யப்படுவதால் முன்பதிவு, இன சுழற்சி முறை, வேலைவாய்ப்பு பதிவு ஆகியவை முறையாக பின்பற்றப்படுவதில்லை. கொரோனா நோய்த் தொற்று நேரங்களில் அனுபவமில்லாத செவிலியர்கள், மருத்துவப்பணியா ளர்கள் ஏஜென்சி மூலம் தேர்வு செய்யப்படுவது சரியானதாக இருக்க முடியாது. எனவே சுகாதாரத் துறை இயக்குநர் மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்களை ஏஜென்சி முறையில் தேர்வு செய்ய வெளியிட்ட அறிக்கையை ரத்து செய்ய உத்தரவிடவேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அமர்வு முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்ததுஅப்போது அரசுத் தரப்பில் ‘‘தேசிய சுகாதாரத்துறை ஆணையத்தின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியே மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் தேர்வு செய்யப்படுவதாக வும், அவர்கள் தற்காலிக ஊழியர்கள் தான். இதன் மூலம் தமிழ்நாட்டில் 2.4 கோடிமக்கள் பயனடைவார் கள். கொரோனா நோய் தொற்று மற்றும் 2021- தேர்தல் ஆகியவை காரணமாக அவசரமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது இதுவரை 630மினி கிளினிக் திறக்கப் பட்டுள்ளது மேலும் மார்ச் மாதம் முதலே முழுமையாக மினி கிளினிக் செயல்படத் தொடங்கும்’’ எனக் கூறப்பட்டது.அப்போது நீதிபதிகள், “தற்காலிக அடிப்படையில் மருத்துவப் பணியாளர்கள் செவிலியர்கள் தேர்வு செய்யப்படுவதன் காரணம் என்ன?” என கேள்வி எழுப்பினர்.இதுகுறித்து தமிழக அரசு வழக்கறிஞர் செவ்வாயன்று பதிலளிப்பதாக கூறியதைத்தொடர்ந்து வழக்கு விசார ணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.