மதுரை மாநகராட்சி வரி மோசடி தொடர்பான மேல்முறையீடு மனு, வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் சில கட்டடங்களுக்கு வணிக வரிக்குப் பதிலாகக் குடியிருப்பு வரியாக மாற்றி நிர்ணயம் செய்தும், குடியிருப்புக் கட்டடங்களுக்கு வரிக் குறைப்பு செய்ததும் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என என கே.கே. ரமேஷ் என்பவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவய் தலைமையிலான அமர்வு வரும் செப். 8 அன்று விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.