court

img

மாணவிகளுக்கு தனி ஓய்வு அறை - நீதிமன்றம் உத்தரவு

சென்னை,செப்.26- மாணவிகளுக்கான தனி ஓய்வறை அமைப்பதற்கு நிதி ஒதுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலைக் கல்லூரிகளிலும் மாணவிகளுக்குத் தனி ஓய்வறை அமைக்க வேண்டும். அதற்காக ரூ.8.55 கோடி நிதியினை 3 வாரத்துக்குள் ஒதுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆணை பிறப்பித்துள்ளனர்.