tamilnadu

img

சாத்தூர்: வெடி விபத்து - பட்டாசு ஆலை உரிமம் ரத்து

சாத்தூர் அருகே வெடி விபத்து சம்பவம் நடந்த பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே முத்தால் நாயக்கன்பட்டி – கீழ் ஒட்டம்பட்டி செல்லும் வழியில் உள்ள திருமுருகன் பட்டாசு ஆலையில் இன்று அதிகாலை பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. தொடர்ந்து 6 மணி நேரமாக பட்டாசு வெடித்துக் கொண்டே இருந்ததால், தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வெடி விபத்தில் உயர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பட்டாசு ஆலையின் மேலாளர் சரவணன் என்பவரை சாத்தூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டவிரோதமாக அளவுக்கு அதிமகமான பட்டாசு மூலப்பொருட்களை தேக்கி வைத்தற்காக இந்த பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.