தாம்பரம் வரதராஜபுரத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் மாற்றிய மற்றொரு வழக்கில் பத்திரப்பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் பத்திரப்பதிவு டிஐஜி ரவீந்திரநாத், கடந்த 2021-ஆம் ஆண்டு, தென்சென்னை பத்திரப்பதிவு டி.ஐ.ஜி.யாக பணியாற்றியபோது தாம்பரத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான கலைவாணி என்பவருக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் மூலம் மாற்றி மோசடி செய்த வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில், தாம்பரம் வரதராஜபுரத்தை சேர்ந்த சையது அமீன் என்பவருக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் காந்தம்மாள் என்பவரின் பெயருக்கு ரவீந்திரநாத் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து, ரவீந்திரநாத் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.