ஒன்றிய அரசின் பரிந்துரையின் பேரில் மத்தியப்பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி அதுல் ஸ்ரீதரன் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ற ராணுவ அதிகாரி சோபியா குரேஷி குறித்து பொதுவெளியில் பாஜக அமைச்சர் விஜய் ஷா அவராகப் பேசியிருந்தார்.
அவர் மீது வழக்குப் பதிய உத்தரவிட்ட மத்தியப்பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி அதுல் ஸ்ரீதரனை சில நாட்களுக்கு முன்பு சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ய கொலீஜியம் முடிவு செய்திருந்தது.
இந்நிலையில் நேற்று அறிக்கை வெளியிட்ட கொலீஜியம் நீதிபதி அதுல் ஸ்ரீதரனை அலகாபாத் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்வதாக அறிவித்துள்ளது.
மேலும் ஒன்றிய அரசின் பரிந்துரையின் பேரில் இடமாற்றம் செய்ததாக கொலீஜியம் விளக்கமளித்துள்ளது.