‘‘இயக்குநர்தான் முதலில் சிறந்த ஒளிப்பதிவாளர். கேமராமேன் சிறந்த கதைசொல்லி. காட்சிகள்தான் கதையைச் சொல்கின்றன. சினிமாவே வாழ்க்கை அனுபவங்களின் மிகப்பெரிய ஒன்றுதான். நம் உணர்வுக்கு வர்ணம் பூசுவதுதான் ஒளிப்பதிவு. எது செய்தாலும் அதில் இயக்குநரின் விருப்பமும் இருக்கணும். ஒவ்வொரு சினிமாவும் ஒரு சின்ன உலகத்தை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கு!’’ - பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ரவிவர்மா பத்திரிகைப் பேட்டியொன்றில் கூறியிருக்கிற ருசிகரமான -அனுபவரீதியிலான விவரணை. மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் ஒளிப்பதிவாளர் இந்த ரவிவர்மா.