cinema

img

“கோடி மீடியா” ஊடகங்களுக்கு நடிகை ஜெனிலியா பதிலடி

முன்னணி திரைக்கலைஞர்களில் ஒருவரான ஜெனிலியா டி சவுசா தமிழில் பாய்ஸ், சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட நிறைய ஹிட் படங்களில் நடித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இந்தி நடிகையான ஜெனிலியா அதிக  இந்திப் படங்களில் நடித்து இருந்தாலும் தமிழ், மலையாளப் படங்கள் தான் அவருக்கு புகழையும், வளர்ச்சியையும் ஏற்படுத்திக் கொடுத்தன. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜெனிலியாவிடம் பாஜக ஆதரவு பெற்ற “கோடி மீடியா”  ஊடகங்கள்,”தென்னிந்திய படங்க ளில் உங்களுக்கு வலுவான கதாப்பாத்தி ரங்கள் தரப்பட்டதில்லை தானே?” என கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த கேள்விக்கு சிறிதும் தாமதிக்கா மல் நடிகை ஜெனிலியா,”நிச்சயம் இல்லை. என்னுடைய தென்னிந்திய படங்களில் எனக்கு எப்போதும் சிறந்த கதாப்பாத்திரங்களே கொடுக்கப் பட்டுள்ளன. அங்கு எனக்கு கிடைத்த வாய்ப்புகளுக்காக நான் என்றும் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். ஹைதராபாத்தில் ஹாசினி என்றும், தமிழில் ஹரிணி என்றும், மலையாளத்தில் ஆயிஷா என்றும் எனது கதாப்பாத்திரங்கள் வழி யேதான் தென்னிந்திய மக்கள் என்னை நினைவில் வைத்திருப்பார்கள். தென்னிந் திய படங்கள் தான் சிறந்தது” என பேசி பதிலடி கொடுத்தார்.

அரசியல் குறி?

ஜெனிலியா டி சவுசா இந்தி திரையுல கின் முன்னணி நடிகரான ரித்தேஷ் தேஷ்முக்கின் மனைவி ஆவார். ரித்தேஷ் தேஷ்முக் காங்கிரஸ் கட்சியில் உள்ளார். இதனால் தான் பாஜக ஆதரவு பெற்ற “கோடி மீடியா” ஊடகங்கள் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் ஜெனிலியாவை குறி வைத்து அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பி வந்தனர். 2016இல் சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ள உள்ள தமிழ்நாடு, கேரள மாநிலங்களுக்கு அவப்பெயரை பிரச்சா ரம் ஏற்படுத்தும் வகையில் ஜெனிலி யாவிடம் சர்ச்சைக்குறிய கேள்விகளை முன்வைத்து “கோடி மீடியா” ஊடகங்கள் ஆதாயம் தேட முயன்றன. ஆனால் தனது கணவர் பாணியில் பதிலடி கொடுத்து  “கோடி மீடியா” ஊட கங்களை வாயடைக்கச் செய்துள்ளார் நடிகை ஜெனிலியா.