cinema

img

உலகம் பார்த்த சினிமா- “சமரிடும் சாமான்யன்! கண் சிமிட்டும் நீதிதேவதை!!”

சாமானியன் ஒருவன், தன் மீதான வழக்கைத் தானே வாதாடி, ஆளும் அமைச்சரின் ஊழலை வெளிக் கொணர்ந்து, வெற்றி பெறமுடியும் என்பதை, ரசிக்கும்படியான படைப்பாக,  சமீபத்தில் வெளிவந்துள்ள மலையாளப் படமே, “நான் தான் கேஸ் கொடு”. சிறுசிறு திருட்டுகள் செய்து வந்தவன் ராஜீவன். காதலி தேவியைச் சந்தித்தபின் திருட்டுத் தொழிலைக் கைவிடுகிறான். ஒரு நாள், கோயில் திருவிழாவில் கலந்துகொண்டு இரவில் வீடு திரும்பு கிறான். தார்ச் சாலையோரமுள்ள எம்.எல்.ஏ வீட்டு சுவர் அருகே சிறுநீர் கழிக்க ஒதுங்குகிறான். சாலைப்பள்ளத்தின் காரணமாக ஆட்டோ ஒன்று நிலை தடு மாறி, இவன்மீது மோதவரும் கணத்தில் சுதாரித்த ராஜீவன், சுவர் ஏறிக் குதிக்கி றான். ஆனால் எம்.எல்.ஏ வீட்டு நாய்கள் அவனது புட்டத்தைக் கடித்துக் குதறி விடுகிறது. திருடன் எனக்குற்றம் சாட்டப்பட்ட ராஜீவன், போலீசில் ஒப்படைக்கப்படு கிறான். வழக்கு விசாரணைக்கு வரும் போது ராஜீவனே வாதாட, நீதிபதி அனுமதிக் கிறார். குற்றம்சாட்டப்பட்டவரே தன் வழக்கில் வாதாட சட்டம் அனுமதிக்கிறது. (ஆனால் நீதிபதிகள் அனுமதிப்பது மிகவும் அரிது.)           ஆட்டோ தடுமாறி மோத வந்ததற்கும், தான் சுவரேறிக் குதிக்கவும் காரணம் சாலைப் பள்ளமே என்றும், இதனால் தான் நாய்க்கடி பட்டதோடு அல்லாமல், திருட்டுக் குற்றமும் சுமத்தப்பட்டுள்ளதாக கூறும் ராஜீவன், மோசமான சாலைக்கு காரணம் பொதுப்பணித்துறை அமைச்சரே, அவர் தான் குற்றவாளி என்று வாதிடுகிறான்.மேலும் ஊழல் அமைச்சர் தண்டிக்கப்பட, ராஜீவன் நடத்தும் நீதிக்கான போராட்டத்தை படத்தின் பிற்பகுதி விவரிக்கிறது.  

படத்தின் ஆரம்பக் காட்சி. ஊர் முக்கத்தில் மணிக்கூண்டு இருக்கி றது. அதைச்சுற்றி பெட்ரோல் பங்க், நீதி மன்றம், மற்றும் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளுக்கான நிழற்கொடை உள்ளது. இவை அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்று தூண்களை ஞாபகப்படுத்தும்  படிமங்களாக வடிவமைக்கப் பட்டுள்ளது.காலமே(மணிக்கூண்டு) சாட்சியாக இம்மூன்று தூண்கள் செயல்படுவதை இக்காட்சி உணர்த்துகிறது.   படத்தின் கால ஓட்டத்தை குறிப்பு ணர்த்த, அரசியல் பகடியுடன் கூடிய புது யுக்தி இப்படத்தில் கையாளப்பட்டுள் ளது. கதை 2016ல் ஒரு லிட்டர் விலை ₹72.29 விற்கும்போது ஆரம்பித்து, 2020 இறுதியில் லிட்டர் விலை ₹.100.03 விற்கும்போது முடிகிறது. இந்த பெட்ரோல் விலை உயர்வு களைக் கொண்டே, காட்சிகள்  நகர்வது, அழகிய குறியீடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்தில் அரசியல் கிண்டலுக்கு பஞ்ச மில்லை. எம்எல்ஏ வீட்டில் “திருடன், திருடன்” என அனைவரும் கூச்சலிட; தூக்கத்திலிருந்து விழித்த, எம்எல்ஏவின் மனைவி, அருகில் படுத்திருக்கும் கண வனைப் பார்த்து, “இவனைவிடவா திருடன் வரப்போறான்” என்று கூறும் காட்சியும்; விசாரணையின் போது எம்எல்ஏவின்  மனைவி, ராஜீவன் தான் திருட வந்ததாக சாட்சியம் அளிப்பார். அதற்கு ராஜீவன், “நான் தான் திருட வந்தேன் என்பது உங்க ளுக்கு எப்படி தெரியும், “எனக் குறுக்கு கேள்வி கேட்க, அதற்கு எம்எல்ஏ மனைவி, “எம்எல்ஏ, பிஏ தான் சொன்னார்”, என பதில் கூறுவாள். அதற்கு ராஜீவன் உடனே, “திருடர்களை பிஏக்களுக்கு நன்றாகவே தெரியும்” எனக் கூறும் காட்சி, உச்சபட்ச அரசியல் எள்ளல். நீதிபதி வழக்கு விசாரணையின் போது சாட்சிகளை கோருவார். அதற்கு ராஜீவன் சாலையில் உள்ள பள்ளமே சாட்சி என்கிறான். அதனை போலீஸ் சாட்சியாக எடுத்துக் கொள்ளவில்லை என நீதிபதி கூற, உடன் ராஜீவன் நீதிபதி முன் தனது புட்டத்தில் நாய் கடித்த குழியை காட்டும் வெள்ளந்தித்தனம்,ஒரு பச்சாதாபத்தை நமக்குள் கடத்துகிறது. நீதிமன்றத்தில் ஆஜராகாத அமைச் சரை, சம்மன் அனுப்புவதற்கான சூழல், விசாரணையின் போக்கில்போய்க் கொண் டிருக்கையில், திடீரென உருவாகும்.அந்தக் காட்சி,மிக   நேர்த்தியாக,எவ்வித மிகைப்படுத்தலுமின்றி, சிறப்பாகப் வடி வமைக்கப்பட்டுள்ளது. கோர்ட்டில் அமைச்சர் ஆஜர் ஆகிறார். குற்றவாளி கூண்டிற்குள் அவருடைய கைத் தடிகள் நாற்காலியை கொண்டு வந்து வைக்க,அதில் அமைச்சர் உட்காருகிறார்.அப்போது நீதிபதி,”தனியாக நிற்க  பயப்படுகிறீர்களா?”எனக்கேட்கிறார.

அதற்கு அமைச்சர், “தேர்தலில் எப் பொழுதும் மற்ற கட்சிகளோடு கூட்டணி வைத்தே நிற்பேன்”எனக் கூற; இதற்கு நீதிபதி, “அதைக்கூறவில்லை; குற்ற வாளிக் கூண்டில் தனியாக நிற்க பயமோ?” என்றவுடன், அல்லக்கைகள் நாற்காலியை  எடுக்க,அமைச்சர் குற்றவாளி கூண்டில் தனியாக நிற்பது  ரசிக்கத்தக்க காட்சி. இன்ஜினியர் சாமுவேலை அரசு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய் வார். அவர் இன்ஜினியரிடம் “உங்களுக்கு சட்டம் கொஞ்சம் தெரியுமா?”எனக்கேள்வி கேட்கும்போது, அதற்கு ராஜீவன், “ஆமாம், உங்களுக்கு எப்படி ரோடு போடத் தெரியுமோ!அதேபோல் அவருக்கு சட்ட மும் கொஞ்சம் தெரியும்!”எனக் குறுக்கிட்டு பேசுகின்ற வசனம் பளிச் கிண்டல்.  நீதிமன்றத்தில் அமைச்சர் மற்றும் இஞ்சினீயர் ஆகியோர் குறுக்கு விசா ரணை செய்யப்படும் காட்சிகளில் மக்க ளால் தேர்வாகும் அரசியலர்க்கும், நிர்வாகத்துறை அதிகாரிகளுக்குமான கள்ளக்கூட்டும்; அதேசமயம் ஊழலுக்கு யார் பொறுப்பு என்பதில் இரண்டு தரப்பும் முரண்பட்டு நிற்பதும் சிறப்பாக பகடிக்கு உள்ளாக்கப்படுகிறது. ராஜீவனின் வழக்கறிஞர் கங்காதரன் மூலம் விபத்து நடந்த சாலைக்கான ஆவ ணங்களை, அமைச்சர் செய்த ஊழல்கள் அடங்கிய ஆவணங்களை கோர்ட்டுக்கு சமர்பிப்பதை கோர்ட் ஏற்கிறது. இதில் கடுப்பான அரசு வழக்கறிஞர்,தனது ஜீனியர் வழக்கறிஞரின் காதுபட மெல்லிய குரலில், “இவருக்கு மேல கோர்ட் இல்லன்னு நினைப்பு”எனப் பேசுவார்.அதனை கேட்ட நீதிபதி தண்ணீரை பருகிக் கொண்ட,”ஆமா! அங்க போணா மட்டும் கிழிச்சுருவீங்க”எனச் சொல்லு கின்ற காட்சி எதார்த்தமான வெளிப்பாடு.    

குஞ்சக்கோ போபனின் அசாத்திய மான நடிப்பு, ஆச்சரியப்பட வைக்கிறது. சிறந்த திரைக்கதையோடு,படத்தை இயக்கியுள்ள ரத்தீஸ் பாலகிருஷ்ணன் போடுவால், சிறந்த படைப்பாளியாக பரிணமித்திருக்கிறார். தேவி என்றப் பாத்திரப் படைப்பை காயத்ரி சங்கர்,தனது நடிப்பால் மெருகேற்றியுள்ளார். கே.கே.குன்கி கிருஷ்ணன்  மாஜிஸ்திரேட் 1ஆக,தலை சிறந்த நடிப்பை அளித்து அசத்தியுள்ளார். உதாரணமாக, விசாரணையின் போது,  நீதிபதியிடம் தனக்கு பெண் குழந்தை பிறந்த தகவலை ராஜீவன் கூறுகிறான். அப்பொழுது நீதிபதி குறிப்பெடுக்கும் பேப்பரில் மார்ஜின் போட்டுக் கொண்டே, மானசீகமாக சந்தோஷப்படுவதும், தலையை சற்றே சாய்த்துக் கொண்டு சிரிப்பதும் அவரது உடல் மொழி தேர்ந்த நடிப்பைக்காட்டுகிறது.  இறுக்கமான முகத்தோடு  இறுதி தீர்ப்பு வழங்கும் மாஜிஸ்ட்ரேட்டாக நடித்துள்ள பசில் யோசப் தனது சிறப்பான பங்க ளிப்பைச் செய்துள்ளார். ஸ்டுக்கர், அரசு தரப்பு வழக்குரைஞராக நடிப்பில் எக்குறையுமின்றி பிரகாசிக் கிறார். இசை படத்திற்கு நல்ல பலம் சேர்க் கிறது.” ஆசை என்பது ஆணில் உள்ளது;  அன்பு என்பது பெண்ணில் உள்ளது”என்ற பாடல் கேட்க இனிமை. நாயகன் ராஜீவன், அமைச்சர் மீதான தனிப்பட்ட முறையில் கோபம் கொள்வதற்  கான காரணம் சரியாக அலசப்பட்டிருக்கலாம்.          எவ்வித அமைப்பின் துணையின்றி, ஒரு சாமான்யன் அமைச்சருக்கு எதிராக  வெற்றி பெறுவது இன்றையச் சூழலில் சாத்தியமா?என்ற கேள்வியும் இயல்பாக எழுவதை தவிர்க்க முடியவில்லை.  நீதிமன்றங்களில் வழக்காடு நடை முறைகள் குறித்து இந்திய மொழிகளில் குறிப்பிடத்தக்க படங்களாக “கோர்ட்” என்ற மராத்தி படமும், ”வழக்கு எண் 18/9”, கடைசி விவசாயி”போன்ற  சிறந்த தமிழ் படங்களும் வந்துள்ளன. ஆனால் மலை யாளத்தில் வெளிவந்துள்ள இப்படம் சாதா ரண குடிமகன், தானே வாதாடி வெற்றி பெறுவதை பேசுவதால், இப்படம் தனித்துவம் பெறுகிறது.