cinema

img

மாமன்னன் - ஜி.ராமகிருஷ்ணன் ,சிபிஐ(எம்), அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்

தமிழகத்தில் ஊடகங்களிலும் மக்கள் மத்தியிலும் பேசுபொரு ளாக விவாதப்பொருளாக மாறியுள்ள மாமன்னன் திரைப்படத்தை திரையரங்கிற்குச் சென்று பார்க்கலாம் என நினைத்திருந்தேன். படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அழைப்பை ஏற்று, சிறப்புக் காட்சியைப் பார்த்தேன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தோழர். ஆர்.நல்லகண்ணு, சி.மகேந்திரன், பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள்,  மார்க்சிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாநிலக்குழு உறுப்பி னர் கே.சுவாமிநாதன் ஆகியோரோடு நானும் சேர்ந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை அளித்த இயக்குநர் மாரிசெல்வ ராஜின் மூன்றாவது படமிது. தொடர்ந்து சாதிக்கொடுமையை வலுவாகத் தனது திரைப்படங்களில் பேசிவரும் இயக்குநர் மாரிசெல்வராஜ் இந்தப் படத்திலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார். மாமன்ன னாக வைகைப்புயல் வடிவேலு அவருடைய மகன் அதிவீரனாக உதயநிதி, உதயநிதியின் இணை லீலாவாக கீர்த்தி சுரேஷ் மற்றும்  பலர் இந்தத் திரைப்படத்தில் நடித்திருக்கி றார்கள். தனது முந்தைய படங்களைப் போலவே இந்தப் படத்திலும் சாதிக் கொடுமையையும், அதை எதிர்த்த போராட் டத்தையும் கருவாக மாரிசெல்வராஜ் எடுத்துக் கொண்டாலும், வழக்கத்திற்கு மாறாக, நடப்பு அரசியலையும் திரைக்கதை யில் முக்கிய அம்சமாக இணைத்துள்ளார். மாமன்னன் கதாபாத்திரம் பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர். அவரை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெறச்  செய்த தொகுதியில் உள்ள மாவட்ட கட்சித்தலைமை சாதி ஆதிக்க உணர்வு கொண்டிருக்கிறது. மாமன்னன் மகன் அதிவீரன் சாதிக்கொடுமைக்கு எதிரான போராளியாகத் திகழ்கிறான்.

சாதி-ஆதிக்க உணர்வுள்ள தன்  கட்சித் தலைவரை சந்திக்க சட்டமன்ற உறுப்பினர் மாமன்னன் செல்கிறார். அவருடைய மகன் அதிவீரனும் உடன் செல்கிறான். சட்டமன்ற உறுப்பினரையே நிற்க வைத்து அந்த உள்ளூர்த் தலைவர் பேசுகிறார். தந்தையை நாற்காலியில் உட்கார சொல்கிறார் மகன். சாதி வெறியுள்ள உள்ளூர்த் தலைவர், சட்ட மன்ற உறுப்பினரையே நாற்காலியில் உட்கார வைக்கத் தயாராக இல்லை. இதுவே மோதலாக வெடிக்கிறது. வெடிக்கும் இந்த மோதல் அடுத்தடுத்து எவ்வாறு செல்கிறது என்பதை படம் பார்த்து அறிந்து கொள்வது நல்லது. இந்தக் காட்சியைப் பார்க்கிறபோது கீழத்தஞ்சையில் (திருவாரூர், நாகை) சாதிக்கொடுமைக்கு எதிராக நடந்த வீரப்போராட்டக் காவியம் நினைவுக்கு வருகிறது. காலங்காலமாக பண்ணையடி மைகளாக சாதிக்கொடுமைக்கும், பொருளா தாரச் சுரண்டலுக்கும் உள்ளாக்கப்பட்ட தலித் மக்களிடம், ‘அடித்தால் திருப்பியடி!’ என முதன்முதலாக சுயமரியாதை உர மேற்றினார் கம்யூனிஸ்ட் தலைவர் பி.சீனி வாசராவ். சாதிக்கொடுமை, பொருளாதாரச் சுரண்டலை எதிர்த்து கீழத்தஞ்சையில் எழுச்சி மிக்க போராட்டம் நடந்து, முத்தரப்புப்  பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. போராட்ட இயக்கத்தின் கம்யூனிஸ்ட் பிரதிநிதியான களப்பால் குப்பு, நிலச்சுவான்தார்கள், அரசு அதிகாரிகள் இடம்பெற்ற முத்தரப்புப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டார். களப் பால் குப்பு நிலச்சுவான்தார்களோடு சம மாக நாற்காலியில் அமர்ந்து பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டார். உயர்சாதி மற்றும் இடைநிலைச் சாதியைச் சேர்ந்தவர்களோடு, மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டும் விதமாக, சமமாக நாற்காலி யில் உட்கார்ந்ததே அன்றைக்கு மிகப்பெரும் வெற்றியாகப் பேசப்பட்டது, இது வரலாறு. 

சாதிக்கொடுமையை அப்பட்டமாக விளக்கும் இப்படியொரு காட்சியை படத்தில்  வைத்திருப்பதன் மூலம், சாதி என்பது நாகரிக சமூகத்தில் இன்னமும் எத்தகைய கொடூரத்தை நிகழ்த்துகிறது என்பதை மிக வலுவாகப் பதிவு செய்திருக்கிறார் மாரி செல்வராஜ். படத்தில் இடம்பெற்றிருக்கும் இத்தகைய அம்சங்கள் பாராட்டுக்குரியவை. வழக்கமாக இயக்குநர் மாரிசெல்வ ராஜின் திரைப்படத்தில் கதைதான்  நாயகன். ஆனால், இப்படத்தில் வைகைப் புயல் வடிவேலுவும் கதாநாயகனாக ஜொலித்திருக்கிறார். வாழ்தலே கடினமாகிக் கொண்டிருக்கிற இன்றைய அரசியல் பொ ருளாதாரச் சூழலில், எப்போதோ தான் நடித்த நகைச்சுவைக் காட்சிகளால் இப்போதும் தமிழக மக்களை சிரிக்க வைத்துக் கொண்டி ருப்பவர் நடிகர் வடிவேலு. இனி அவரை நகைச்சுவை நடிகர் எனக் கூறமுடியாதோ எனும்படி, மிகவும் தீவிரமான ‘பிரதானப் பாத்திரத்தில்’ முத்திரை பதித்திருக்கிறார்.  இடதுசாரி எண்ணம் கொண்ட பாத்திர மாக கீர்த்தி சுரேஷ்  வந்தாலும்  இடதுசாரி அரசியல்  பார்வையை  அந்த பாத்திரத்தின் வழி ரசிகர்களுக்கு உணர்த்தும்படியான காட்சியமைப்புகள் படத்தில் இல்லை என்பதை  மாரிசெல்வராஜ்  ஏற்பார் என  நினைக்கிறேன் .நவீனக் கல்வி கற்ற உதய நிதியும் நாயகியும்  தீவிரமான பாதிப்பை உருவாக்கக் கூடிய சாதியத்தை  எதிர்த்த போராட்டத்தில்  கருத்தியல்ரீதியிலான  பங்களிப்பை செலுத்துபவர்களாக  காட்சிய மைப்புகளில்   திரைக்கதையில் இல்லாததால் அவர்கள்  வெறுமனே  சண்டைபோடும் வழக்கமான  நாயக நாயகியாக  இருக்கின்ற னர்.உதயநிதி அதிவீரனாகவே வாழ்ந்திருக்கிறார்.  கீர்த்தி சுரேஷ்  (லீலா) மற்றும் அவரது நண்பர்கள் பட்டியலினத்தைச்  சாராதவர் கள். இவர்கள்  அதிவீரனுடன் இணைந்து சாதிக் கொடுமைக்கு எதிராகபோராடுவது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக் கது. இரண்டு பகுதியைச்  சார்ந்தவர்களும் இணைந்து போராடினால் தான் வெற்றி பெற முடியும்.

பன்றி வளர்ப்பையும், நாய் வளர்ப்பை யும் சாதியமைப்பு வேரூன்றி உள்ள சமூ கத்தில் ஒடுக்குமுறையை உணர்த்துவதற் கான அடையாளங்களாக திரைக்கதையில்  உருவாக்கி இருக்கிறார். இயக்குநரின் சிறப் பான திரைக்கதை உத்திகளில் இது முக்கிய மானது. கதைக்கரு, கதாபாத்திர வடிவ மைப்பு, திரைக்கதை, காட்சியமைப்பு, இடம் பெற்றுள்ள அம்சங்கள் என எல்லாவற்றி லும் நுட்பமாக கவனம் செலுத்தி மாமன்ன னை உருவாக்கி இருக்கிறார். மொத்தத்தில் காலங்காலமாக இந்தியா வில் புரையோடியுள்ள சாதிக் கொடுமையை தோலுரித்துக் காட்டுவதோடு, அதை எதிர்த்தப் போராட்டத்தையும் இயக்குநர் மாரிசெல்வராஜ் திரைவடிவமாக்கியது பாராட்டுக்குரியது. துவக்கத்தில் இருந்து கிளைமாக்ஸ் வரையில் விறுவிறுப்பு குறை யாமல் படம் பார்ப்பவரைக் கட்டிப்போடு கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை ஒரு சமூகத்தின் கலைப்படைப்புகளில் வர வேண் டும். அவ்வகையில் வணிக சினிமா முயற்சி களில் சாதிக்கொடுமையைப் பற்றி தொடர்ந்து பேசுவதும், மாற்றத்திற்கான நியாயத்தை உரக்கப் பேசுவதும் முக்கியமான கலைப் பணி. அந்தப் பணியைத் தொடர்ந்து செய்து வருகிற மாரிசெல்வராஜுக்குப் பாராட்டுகள். ஏ.ஆர். ரஹ்மான் இசையும், ஒளிப்பதிவா ளர் தேனி ஈஸ்வருடைய ஒளிப்பதிவும் படத்திற்கு மெருகூட்டுகிறது. சாதிப் பிரச்ச னையை வலுவாகப் பேசுகிற இந்த திரைப்படத்தின் உருவாக்கத்தில் பங்கேற்றி ருக்கிற முன்னணி நடிகர்கள், கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் பாராட்டுகள். அனைவரும் பார்க்க வேண்டிய படம்.