தங்கம் விலை ஒரே நாளில் இரு முறை உயர்ந்து ரூ.91,400ஐ எட்டியுள்ளது.
சென்னையில் இன்று (09-10-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை காலையில் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, பிற்பகலில் மீண்டும் ரூ.200 உயர்ந்து ரூ.91,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை காலையில் சவரனுக்கு ரூ.15 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.25 உயர்ந்து ரூ.11,425-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை பிற்பகலில் சவரனுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,440க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.177-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
